ஆப்நகரம்

Elephants Death: மின்சாரம் தாக்கி 7 யானைகள் பரிதாப பலி!!

ஒடிசாவில் மின்சாரம் தாக்கிய 7 காட்டு யானைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 27 Oct 2018, 4:30 pm
ஒடிசாவில் உள்ள கிராமம் ஒன்றில், மின்சாரம் தாக்கியதில் 7 காட்டு யானைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil மின்சாரம் தாக்கி 7 யானைகள் பரிதாப பலி!!
மின்சாரம் தாக்கி 7 யானைகள் பரிதாப பலி!!


பெருகி வரும் மக்கள் தொகை காரணமாக, மனிதர்கள் காடுகளை ஆக்கிரமித்து குடியிருப்புகளை ஏற்படுத்தி வருகின்றனர். இதனால் காட்டு மிருகங்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றன.

அவைகளின் வாழ்விடங்களை மனிதர்கள் ஆக்கிரமிப்பதால், அவை மனிதர்கள் வசிக்கும் இடங்களுக்கு வருகின்றன. ஆனால், மனிதர்கள் அவற்றிக்கு பாதுகாப்பு அளிக்காமல், அவற்றைக் கொன்று விடுகிறான். சமீப காலமாக அவ்வாறு இறக்கும் காட்டு விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

இந்நிலையில், ஒடிசாவில் உள்ள கமலங்கா என்ற கிராமத்தில் இன்று அதிகாலை 7 யானைகள் உயிரிழந்து கிடந்துள்ளன. இதைப் பார்த்த அந்தக் கிராம மக்கள் உடனே வனத்துறையினருக்கு இதைப் பற்றி தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, அங்கே வந்த வனத்துறையினர், யானைகள் உயிரிழந்தது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில், மின்சாரம் பாய்ந்து யானைகள் உயிரிழந்து இருக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

அடுத்த செய்தி