கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் பலியாகியுள்ளனர்.
கேரளாவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பத்து பேர், நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு செல்வதற்காக காரில் பயணம் மேற்கொண்டிருந்தனர். கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கார் வந்து கொண்டிருக்கும் போது, அந்த வழியாக வந்து கொண்டிருந்த மணல் லாரி ஒன்று காரை நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் கார் அப்பளமாக நொறுங்கியது. காரில் இருந்த பத்து பேரில் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். பலத்த காயமடைந்த நால்வரில் , ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். மீதமுள்ள மூவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்தை ஏற்படுத்திய மணல் லாரியின் ஓட்டுநர் தலைமறைவாகியுள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக உள்ள லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.
7 killed in car-lorry collision near karur
கேரளாவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பத்து பேர், நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு செல்வதற்காக காரில் பயணம் மேற்கொண்டிருந்தனர். கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கார் வந்து கொண்டிருக்கும் போது, அந்த வழியாக வந்து கொண்டிருந்த மணல் லாரி ஒன்று காரை நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் கார் அப்பளமாக நொறுங்கியது. காரில் இருந்த பத்து பேரில் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். பலத்த காயமடைந்த நால்வரில் , ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். மீதமுள்ள மூவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்தை ஏற்படுத்திய மணல் லாரியின் ஓட்டுநர் தலைமறைவாகியுள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக உள்ள லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.
7 killed in car-lorry collision near karur