ஆப்நகரம்

7 மாத கர்ப்பிணி சமையலரை, வயிற்றில் உதைத்த சத்துணவு அமைப்பாளர்!!

அங்கன்வாடி மையத்தில் சமையலராக இருக்கும் 7 மாத கர்ப்பிணியை சத்துணவு அமைப்பாளர் வயிற்றில் உதைத்ததால் உயிருக்கு ஆபத்தான நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Samayam Tamil 20 Jul 2018, 2:32 am
நாமக்கல்: அங்கன்வாடி மையத்தில் சமையலராக இருக்கும் 7 மாத கர்ப்பிணியை சத்துணவு அமைப்பாளர் வயிற்றில் உதைத்ததால் உயிருக்கு ஆபத்தான நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Samayam Tamil 7 மாத கர்ப்பிணி சமையலரை, வயிற்றில் உதைத்த சத்துணவு அமைப்பாளர்!!
7 மாத கர்ப்பிணி சமையலரை, வயிற்றில் உதைத்த சத்துணவு அமைப்பாளர்!!


ராசிபுரம் பாரதிதாசன் சாலையில் உள்ள நகராட்சி அங்கன்வாடி மையத்தில், தனலட்சுமி என்பவர் சமையலராக பணியாற்றி வருகிறார். 7 மாத கர்ப்பிணியான தனலட்சுமி, சத்துணவு அமைப்பாளர் உமா முட்டை, அரிசி உள்ளிட்ட சத்துணவுப் பொருட்களை வெளியில் விற்பதாக உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில், இதுதொடர்பாக இவர்களிடையே ஏற்பட்ட வாக்கு வாதத்தில், தனலட்சுமியை சத்துணவு அமைப்பாளர் உமா வயிற்றில் உதைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவர் ஆபத்தான நிலையில் ராசிபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் சேலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இதைத்தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி