சண்டிகார்: ஹரியானா மாநிலம் அருகே பஞ்சாயத்தின் தலையீடு காரணமாக பாலியல் பலாத்காரம் செய்தவரை திருமணம் செய்துக் கொண்ட பெண், மாமியார் கொடுமை தங்காமல் தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள ஜாகத்ரி நகர் காவல் நிலையத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு அனுஜ் என்பவர் மீது பாலியல் பலாத்கார வழக்கு தொடரப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், பாலியல் வழக்கிற்கிடையே கிராம பஞ்சாயத்தாரின் தலையீட்டையடுத்து பலாத்காரம் செய்த இளம் பெண்ணையே அனுஜ் திருமணம் செய்துக் கொண்டார். இருவருக்கும் திருமணமாகி 7 மாதங்கள் ஆகிறது.
இதையடுத்து, இளம் பெண்ணுக்கு அனுஜின் குடும்பத்தார் தனது மகளிடம் வரதட்சணை மற்றும் பாலியல் வழக்கிற்கு செலவிட்ட பணத்தை தரும்படியும் கொடுமைப்படுத்தி வந்ததால் தனது மகள் தற்கொலை செய்துக் கொண்டதாக அனுஜின் குடும்பத்தார் மீது பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் தற்போது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள ஜாகத்ரி நகர் காவல் நிலையத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு அனுஜ் என்பவர் மீது பாலியல் பலாத்கார வழக்கு தொடரப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், பாலியல் வழக்கிற்கிடையே கிராம பஞ்சாயத்தாரின் தலையீட்டையடுத்து பலாத்காரம் செய்த இளம் பெண்ணையே அனுஜ் திருமணம் செய்துக் கொண்டார். இருவருக்கும் திருமணமாகி 7 மாதங்கள் ஆகிறது.
இதையடுத்து, இளம் பெண்ணுக்கு அனுஜின் குடும்பத்தார் தனது மகளிடம் வரதட்சணை மற்றும் பாலியல் வழக்கிற்கு செலவிட்ட பணத்தை தரும்படியும் கொடுமைப்படுத்தி வந்ததால் தனது மகள் தற்கொலை செய்துக் கொண்டதாக அனுஜின் குடும்பத்தார் மீது பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் தற்போது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.