ஆப்நகரம்

பெங்களூரில் மின்னல் தாக்கி 7 பேர்!

பெங்களூரில் மின்னல் தாக்கியதில் 7 பேர் பலியாகியுள்ளனர். இதில் 5 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று கருதப்படுகிறது.

TNN 5 Oct 2017, 9:36 pm
பெங்களூர்: பெங்களூரில் மின்னல் தாக்கியதில் 7 பேர் பலியாகியுள்ளனர். இதில் 5 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று கருதப்படுகிறது.
Samayam Tamil 7 people including 5 from the same family died in mysore by a lightning strike
பெங்களூரில் மின்னல் தாக்கி 7 பேர்!


பெங்களூரில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்கு இயல்பு வாழ்க்கைப் பாதிப்படைந்துள்ளது.

இந்நிலையில், இன்று மைசூர் மாவட்டம், பிரியாபட்டணம் தாலுகாவிலுள்ள நந்தினாதபுரா என்ற கிராமத்தில், மின்னல் தாக்கியதில் சுஜய் , சுவர்ணம்மா, புட்டண்ணா, சுதீப், திம்மேகவுடா, உமேஷ் மற்றும் பிரவீண் ஆகிய 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இதில் 5 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கக்கூடும் என கருதப்படுகிறது. இதைத் தொடர்ந்து, கர்நாடக முதல்வர் சித்தராமையா உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ருபாய் இழப்பீடு அறிவித்துள்ளார்.

7 people including 5 from the same family died in Mysore by a lightning strike.

அடுத்த செய்தி