ஆப்நகரம்

7 வயது சிறுமியை பலாத்காரம் செய்து எரித்து கொலை செய்த ஐ.டி ஊழியர் கைது!

சென்னை போரூரில் 7 வயது சிறுமியை பலாத்காரம் கொலை செய்து எரித்த ஐடி ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

TNN 9 Feb 2017, 2:23 am
சென்னை : சென்னை போரூரில் 7 வயது சிறுமியை பலாத்காரம் கொலை செய்து எரித்த ஐடி ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Samayam Tamil 7 years old girl brutally murdered chennai
7 வயது சிறுமியை பலாத்காரம் செய்து எரித்து கொலை செய்த ஐ.டி ஊழியர் கைது!


சென்னை போரூருக்கு அருகில் உள்ள மதனந்தபுரத்தில் உள்ள அடுக்குமாடு குடியிருப்பில் வசித்து வரும் ஐடி ஊழியரின் 7 வயது மகள் ஹாசினி கடந்த 5ம் தேதி வெளியில் நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த பொழுது காணாமல் போனதாக போலீஸில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பெயரில் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது அடுக்குமாடு குடியிறுப்புக்கு அருகில் உள்ள தனியார் பள்ளியில் பொருத்தப்படிருந்த சிசிடிவி வீடியோ காட்சிகளை ஆராய்ந்தனர். அதில் சிறுமி குடியிறுப்பின் காம்பவுண்டை தாண்டி செல்லவில்லை என தெரிந்தது.

இதையடுத்து அடுக்குமாடு குடியிறுப்பில் வசித்து வரும் நபர்களிடன் விசாரணை நடத்தினர். அதில் ஜஸ்வந்த என்ற 22 வயது இளைஞன் முன்னுக்கு பின் முரணாக பேசியதால், அவரிடம் விசாரணை தீவிரப்படுத்தியது.

இதில் சிறுமியை பலாத்காரம் செய்து தலையணையால் அழுத்தி கொலை செய்ததாகவும், பின் சிறுமியின் உடலை ஒரு பையில் வைத்து தாம்பரம் புறவழிச்சாலைக்கு எடுத்துச் சென்று பெட்ரோல் ஊற்றி எரித்ததாகவும் ஜஸ்வந்த் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதையடுத்து ஜஸ்வந்த் மீது வழக்கு பதிந்து கைது செய்து விசாரணை நடந்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி