ஆப்நகரம்

மினிவேன் கிணற்றுக்குள் கவிழ்ந்து 8 பேர் பலி! கோவில் திருவிழாவிற்கு சென்ற போது பரிதாபம்!!

திருச்சி அருகே மினிவேன் ஒன்று 60 அடி தண்ணீரில்லா கிணற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் குழந்தைகள் உட்பட எட்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Samayam Tamil 18 Aug 2019, 6:40 pm
திருச்சி துறையூர் அருகே மினிவேன் கிணற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 3 குழந்தைகள் உட்பட 8 பேர் பலியாயினர்.
Samayam Tamil tirchy mini van


திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள எஸ்.எஸ் புதூர் பகுதியில், 22 பேருடன் வந்த மினிவேன் ஒன்று வந்து கொண்டிருந்தது. திருமனூர் அருகே சாலை வளைவில் திரும்பியபோது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால், ரோட்டில் தாறுமாறாக ஓடிய மினிவேன், அருகில் தண்ணீர் இல்லாத 70 அடி கிணற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு மீட்பு படையினர், போலீசார் கிராம மக்களின் உதவியுடன் கிணற்றில் சிக்கியவர்களை மீட்டனர். இந்த விபத்தில் 3 குழந்தைகள் உட்பட மொத்தம் 8 பேர் பலியாகி உள்ளதாக செய்திகள் வந்துள்ளது.

(வரி செலுத்தாத நிறுவனங்களின் வாசல் முன்பு குப்பைத் தொட்டிகளை வைத்த நகராட்சி நிர்வாகம்)

இதுவரையில், 14 பேர் மீட்கப்பட்டுள்ளனர். படுகாயமடைந்த மற்ற பயணிகள் முழுவீச்சில் மீட்கப்பட்டு வருகின்றனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மினிவேனில் பயணம் செய்த குணசீலன், குமாரத்தி, யமுனா, சஞ்சனா, கோமதி, சரண்குமார், எழிலரசி ஆகியோர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Also Read This:

அடுத்த செய்தி