ஆப்நகரம்

மைனா-வுக்காக மண்டை உடைப்பு; கொல்கத்தாவில் ஆச்சரியம்

மைனா பறவைக்காக கொல்கத்தா மாநிலத்தில் நிகழந்த மண்டை உடைப்பு சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியுள்ளது.

Ei Samay 27 Jul 2016, 4:48 pm
கொல்கத்தா: மைனா பறவைக்காக கொல்கத்தா மாநிலத்தில் நிகழந்த மண்டை உடைப்பு சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியுள்ளது.
Samayam Tamil a bird mayna was the subject of clash against two neighbors
மைனா-வுக்காக மண்டை உடைப்பு; கொல்கத்தாவில் ஆச்சரியம்


கொல்கத்தா மாநிலம் தெற்கு 24 பர்கானா மாவட்டத்தில் தான் இந்த வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த மாவட்டத்தை சேர்ந்த அமித் குமார் சர்கார் என்பவரது மைனா பறவை, தற்செயலாக பறந்து மிலன் மண்டல் என்பவரது வீட்டுக்கு சென்றுள்ளது. மிலனின் தாயாரும், மனைவியும் அந்த மைனாவுக்கு உணவளித்து அடைக்கலம் கொடுத்துள்ளனர்.

இதனிடையே, மைனாவை நாள் முழுவதும் தேடிய அமித் குடும்பத்துக்கு, அந்த மைனா மிலனின் வீட்டில் இருப்பது மாலை நேரத்தில் தான் தெரியவந்துள்ளது.

மைனாவை தேடி சென்ற போது, இரு குடும்பத்தாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றி, அமித்தின் மண்டை உடைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து அமித்தின் குடும்பத்தார், காவல் நிலையத்தில் புகார் அளித்து எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.

மிலனின் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டதால், அவரது குடும்பத்தார் நீதிமன்றத்தை அனுகியுள்ளனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மட்டுமல்லாமல் நீதிமன்றத்தினுள் இருந்த அனைவருமே ஆச்சரியத்தில் மூழ்கினர்.

அதன்பின்னர், ரூ.10,000 பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்து, முன் ஜாமீன் வாங்கிக் கொள்ளுமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த செய்தியை வங்காள மொழியில் படிக்க:
http://eisamay.indiatimes.com/city/kolkata/a-bird-mayna-was-the-subject-of-clash-against-two-neighbors-/articleshow/53410420.cms

அடுத்த செய்தி