ஆப்நகரம்

இறந்த பின்னும் தனது உடலுறுப்புகளை தானம் செய்த மாமனிதர்.!

மதுரையில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் 5 பேருக்கு தானமாக வழங்கப்பட்டது.

TNN 8 Nov 2017, 2:32 pm
மதுரையில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் 5 பேருக்கு தானமாக வழங்கப்பட்டது.
Samayam Tamil a man died in accident donated his organs in madurai
இறந்த பின்னும் தனது உடலுறுப்புகளை தானம் செய்த மாமனிதர்.!


திண்டுக்கல் கோவிந்தபுரத்தைச் சேர்ந்தவர் அறிவழகன் . இவர் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது விபத்தில் சிக்கினார் .இதையடுத்து மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அறிவழகன் மூளைச்சாவு அடைந்தார்.

இதனை உறுதி செய்த மருத்துவர்கள் அறிவழகனின் குடும்பத்தினரிடம் உடலுறுப்பு தானம் பற்றிய தகவலைத்தெரிவித்தனர். அதனால் அறிவழகனின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க அவரின் குடும்பத்தினர் முன்வந்தனர்.

இதனையடுத்து சிறுநீரகங்கள் மதுரை மற்றும் நெல்லை அரசு
மருத்துவமனைகளுக்கும்,கல்லீரல் மற்றும், கண்கள் மதுரை அப்போலோ மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டது.

அடுத்த செய்தி