ஆப்நகரம்

நெல்லை திரையரங்கில் ‘பேய்’ படம் பார்த்தவர் மர்ம மரணம்

நெல்லை திரையரங்கம் ஒன்றில் "பேய்" படம் பார்ந்த தொழிலாளி மர்ம மரணம் அடைந்துள்ளார்.

TNN 25 Apr 2017, 8:51 pm
நெல்லை : நெல்லை திரையரங்கம் ஒன்றில் "பேய்" படம் பார்ந்த தொழிலாளி மர்ம மரணம் அடைந்துள்ளார்.
Samayam Tamil a man died in thearter when show the ghost movie
நெல்லை திரையரங்கில் ‘பேய்’ படம் பார்த்தவர் மர்ம மரணம்



நெல்லை டவுன் கம்புகடை தெருவை சேர்ந்தவர் காமில் (47).இவர் கூலி தொழிலாளியாக வேலை செய்துவருகிறார். காமில் நேற்று இரவு இவர் நெல்லையில் உள்ள பிரபல திரையரங்கிற்கு சென்று பேய் மற்றும் ஆவி சம்பந்தமான படம் ஒன்றை பார்க்க சென்றிருந்தார்.

படம் முடிந்த பின்னர் காமில் இருக்கையில் அமர்ந்த நிலையில் மயங்கி கிடந்தார். இதனை கண்ட திரையரங்கக ஊழியர்கள் ஆம்புலன்ஸ்சுக்கும் தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து அவரை பரிசோதித்தனர். அப்போது காமில் ஏற்கனவே இறந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காமிலின் உடலைக் கைப்பற்றி பிரேச பரிசோதனைக்காக பாளை மேட்டுதிடலில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர்களது உறவினருக்கு தகவல் அளித்தனர்.

காமில் பேய் படம் பார்த்த போது அதிர்ச்சியில் நெஞ்சுவலி வந்து இறந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர், இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். திரையரங்கில் பேய் படம் பார்த்தவர மர்மம மரணம் அடைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

a man died in thearter when show the "ghost movie"

அடுத்த செய்தி