ஆப்நகரம்

காதலியை கொலை செய்து ஏரியில் வீசிய காதலன் - ஆரணி அருகே பரபரப்பு

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே காதலியை கொலை செய்து காதலனும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TNN 20 Jul 2017, 1:19 pm
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே காதலியை கொலை செய்து காதலனும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil a man killed lover at the lake near arani
காதலியை கொலை செய்து ஏரியில் வீசிய காதலன் - ஆரணி அருகே பரபரப்பு


ஆரணியை அடுத்த குன்னத்தூர் அருகே ஏரியில் இளம்பெண் பிணம் நேற்று முன்தினம் கிடந்தது. இது பற்றி தகவல் அறிந்த ஆரணி போலீசார் அங்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அந்த பெண் மலையாம்பட்டுவை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் மதியழகனின் மகள் மோனிகா என்பதும், வேலூர் விடுதியில் தங்கி கல்லூரியில் படித்து வந்ததும் தெரியவந்தது.

இதனிடையே, பெண்ணை கொலை செய்த கோகுல்நாத் கிராம நிர்வாக அலுவலரிடம் சரண் அடைந்தார். அப்போது அவர் கத்தியால் வயிற்றை கிழித்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். பின்னர் அவரை போலீசார் கைது செய்த போலீசார் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அப்போது கோகுல்நாத் அளித்த வாக்குமூலத்தில், தான் 8-ம் வகுப்பு படிக்கும்போதே மோனிகாவை காதலித்து வந்ததாகவும், இதனால் மோனிகாவை திருமணம் செய்து வைக்க சொல்லி அவருடைய பெற்றோரிடம் பெண் கேட்தாகவும் கூறினார். அதற்கு அவர்கள் மறுத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக மோனிகா தன்னிடம் பேச மறுத்து, வேறொரு வாலிபரை காதலித்து வருவதாக கூறியுள்ளார். இதனால் தங்களுக்குள் தகராறு ஏற்பட்டதாகவும், ஆப்போது ஆத்திரத்தில், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்திக்கொன்று விட்டு ஏரியில் வீசியதாவும் கோகுல்நாத் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி