ஆப்நகரம்

சென்னையில் ஓடும் பேருந்தில் சுய இன்பம் - பதைபதைத்துப் போன பெண் பயணி!!

இளம்பெண் முன்பு, ஆண் ஒருவர் சுயஇன்பத்தில் ஈடுபட்டது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Samayam Tamil 1 Dec 2018, 9:40 pm
சென்னையில் ஓடும் பேருந்தில் இளம்பெண் முன்பு, ஆண் ஒருவர் சுயஇன்பத்தில் ஈடுபட்டது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Samayam Tamil சென்னையில் ஓடும் பேருந்தில் சுய இன்பம் - பதைபதைத்துப் போன பெண் பயணி!!
சென்னையில் ஓடும் பேருந்தில் சுய இன்பம் - பதைபதைத்துப் போன பெண் பயணி!!


நேற்று சென்னை கேளம்பாக்கம்-சோழிங்கநல்லூர் இடையே பயணிக்கும் பி19 பேருந்தில், இளம்பெண் ஒருவர் பயணித்துள்ளார். கடைசி இருக்கையில் சன்னல் ஓரத்தில் அமர்ந்து, பாட்டுக் கேட்டுக்கொண்டே அவர் பயணித்துள்ளார்.

அப்போது, அவர் அமர்ந்திருந்த கடைசி இருக்கையின் எதிர் பக்கத்தில் ஆண் ஒருவர் அமர்ந்துள்ளார். அவர் பொது இடம் எனவும் பாராமல், அந்த பெண்ணிற்கு முன்பு சுயஇன்பத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், அந்த நிகழ்வைப் பதிவு செய்து, சின்மயிக்கு அனுப்பியுள்ளார்.

சின்மயி இந்த சம்பவத்தை தனது இன்ஸ்டாகிராமில் ஸ்டேட்டஸில் பகிர்ந்துள்ளார். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதுபோன்ற கீழ்த்தரமான ஆண்கள், சமூகத்தை இன்னும் ஆபத்தானதாக மாற்றுகிறார்கள்.

அடுத்த செய்தி