ஆப்நகரம்

ஆறு பேரை விஷ ஊசி போட்டுக் கொன்ற டாக்டர் கைது..!

மகராஷ்டிர மாநிலத்தில் ஆறு பேரை விஷ ஊசி போட்டுக்கொன்ற மருத்துவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

TNN 16 Aug 2016, 5:52 pm
மகராஷ்டிர மாநிலத்தில் ஆறு பேரை விஷ ஊசி போட்டுக்கொன்ற மருத்துவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
Samayam Tamil a medico allegedly murdered six people by injection
ஆறு பேரை விஷ ஊசி போட்டுக் கொன்ற டாக்டர் கைது..!


கைது செய்யப்பட்ட மருத்துவரின் பெயர் சந்தோஷ் போல் எனவும் அவர் ’எலக்ட்ரோ ஹோமியோபதி’ படித்துவிட்டு,உள்ளூர் மருத்துவமனைகளிலும் ,’வை’ பகுதியில் உள்ள தனது பண்ணை வீட்டிலும் சிகிச்சை அளித்து வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம்,வை பகுதியைச் சேர்ந்த 49 வயதான மங்கள் ஜீதே என்ற பெண்மணி தனது மகளுக்கு பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து புனேவுக்கு கிளம்பிச்சென்றார்.ஆனால் போனவர் திரும்பவே இல்லை.ஜீதே காணாமல் போன சம்பவம் குறித்த விசாரணையை மேற்கொண்ட காவலர்களின் சந்தேகம் சந்தோஷ் பக்கம் திரும்பியது.ஏற்கனவே ஜீதேவுக்கும் ,சந்தோஷுக்கும் பரிட்சையும் உண்டு எனவும்,சமீபத்தில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட சண்டையில், உன்னுடைய தவறான நடவடிக்கைகள் குறித்து எல்லாரிடமும் சொல்லிவிடுவேன் என சந்தோஷை, ஜீதே மிரட்டியதும் தெரியவந்தது.

இது தொடர்பாக சந்தோஷிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது,ஜீதேவை பேருந்து நிலையத்திலிருந்து கடத்திச் சென்று விஷ ஊசி போட்டுக் கொன்றதை ஒப்புக் கொண்டான்.ஜீதே போல மேலும் ஐந்து பேரை விஷ ஊசி போட்டு கொன்றுள்ளதாகவும் தெரிவித்தான்.இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர்,அவனது பண்ணை வீட்டை சுற்றி தோண்டிப்பார்த்தனர்.இதில் நான்கு எழும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன.கொலைசெய்யப்பட்டவர்களில் ஒருவரின் உடலை ஏரிப்பகுதியில் போட்டுவிட்டதாக சந்தோஷ் கூறியுள்ளான்.மீதமுள்ள ஒருவரின் உடல் எங்கு உள்ளது என்பது குறித்து காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட ஆறு பேரும் சந்தோஷுடன் வேலை பார்த்தவர்கள் அல்லது சிகிச்சைக்காக வந்தவர்களாவர்.இந்த கொலை வழக்கில் சந்தோஷிடன் நர்சாக பணியாற்றிய ஜோதி என்ற பெண்மணியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

அடுத்த செய்தி