ஆப்நகரம்

புளூவேல் புயல்-நெல்லை மாணவன் உயிருடன் மீட்பு

திருநெல்வேலி மாவட்டம் பத்தமடையை சேர்ந்த மாணவர், புளூவேல் விளையாட்டால் தற்கொலைக்கு முயன்று உயிருடன் மீட்கபட்டுள்ளான்.

TNN 1 Sep 2017, 1:51 pm
திருநெல்வேலி மாவட்டம் பத்தமடையை சேர்ந்த மாணவர், புளூவேல் விளையாட்டால் தற்கொலைக்கு முயன்று உயிருடன் மீட்கபட்டுள்ளான்.
Samayam Tamil a nellai student committed sucide because of bluewhale game
புளூவேல் புயல்-நெல்லை மாணவன் உயிருடன் மீட்பு


தமிழகத்தில் புளூவேல் விளையாட்டுக்கு இரண்டு மாணவர்கள் தற்கொலை செய்துள்ள அதே சமயத்தில் இன்று புதுச்சேரி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சசிகுமார் என்ற மாணவரும் தற்கொலை செய்துள்ளார். இணையதளத்தில் விளையாடப்படும் இந்த புளூவேல் விளையாட்டு தமிழக மாணவர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது. இது தொடர்பான அனைத்து இணைய வழி தொடர்புகளையும் துண்டிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ள போதிலும் சமூகத்தில் இந்த விளையாட்டின் தாக்கம் அதிகரித்து அசம்பாவித சம்பவங்கள் அரங்கேர ஆரம்பித்துள்ளன.

இன்று, புளூவேல் விளையாட்டின் காரணமாக நெல்லையில் தற்கொலைக்கு முயன்ற மாணவனை உயிருடன் மீட்டுள்ளனர். பாலிடெக்னிக் கல்லூரியில் பயிலும் அந்த மாணவன் புளூவேல் விளையாட்டுக்கு அடிமையாகி தற்கொலைக்கு முயன்றுள்ளான். மீட்கப்பட்ட அவனுக்கு திருநெல்வேலி தனியார் மருத்துவமனையில் மனநல சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

விழிப்புணர்வு

தமிழகத்திலுள்ள பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் புளூவேல் விளையாட்டு குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடையே பகிர்ந்து வருகின்றனர். சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி கூறுகையில், பெற்றொர்கள் குழந்தைகள் மீது மிகுந்த கவனத்துடனும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். மதுரை மாவட்ட கண்காணிப்பாளர் சக்கரவர்த்தி மாணவர்களிடம் பேசுகையில், படிப்பில் தான் கவனம் இருக்க வேண்டும் எனவும், மைதானத்திற்கு சென்று விளையாடுவதுதான் உடலுக்கும், மனதுக்கும் நல்லது என அறிவுரை வழங்கினார். இதுபோன்று போடியில், காவல் துறை அதிகாரி கலந்து கொண்டு மாணவர்களிடையே புளூவேல் விழிப்புணர்வு பற்றி பேசினார். இதில் 2000 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

A nellai student committed sucide because of bluewhale game

அடுத்த செய்தி