ஆப்நகரம்

நோயாளி பெருங்குடலில் சிக்கிய இரும்பு டம்ளர்; எக்ஸ்-ரே மூலம் காத்திருந்த அதிர்ச்சி!

பரிதாபாத்: வயிற்றின் குடல்பகுதியில் இரும்பு டம்ளர் இருந்ததைக் கண்டு, மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

Navbharat Times 1 Oct 2018, 3:25 pm
ஹரியானா மாநிலம் பரிதாபாத் பகுதியைச் சேர்ந்தவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு பிகே மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.
Samayam Tamil glass


அங்கு உபேந்திரா, சந்தீப் அகர்வால் ஆகிய மருத்துவர்கள் பரிசோதனை மற்றும் எக்ஸ்-ரே எடுத்துப் பார்த்தனர். இந்நிலையில் எக்ஸ்-ரேவில் அதிர்ச்சிகரமான விஷயத்தைக் கண்டறிந்தனர்.

அதாவது பெருங்குடலில் இரும்பு டம்ளர் ஒன்று இருந்துள்ளது. இதனால் மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அறுவை சிகிச்சை செய்ய அனுமதிக்குமாறு, அவரது குடும்பத்தாரிடம் கேட்டுக் கொண்டனர்.

ஆனால் அவர்கள் மறுத்து விட்டனர். இதையடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர். இதுகுறித்து பேசிய மருத்துவர் சந்தீப், நோயாளியின் வயிற்றுக்குள் இரும்பு டம்ளரை கட்டாயப்படுத்தி யாரும் நுழைக்கவில்லை என்று கூறுகின்றனர்.

ஆனால் டம்ளர் எப்படி குடலுக்குள் சென்றது கேள்விக்குறியாக உள்ளது. இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

A steel glass seen in large intestine of patient in XRay.

அடுத்த செய்தி