ஆப்நகரம்

புலிகள் காப்பகத்தில் மர்மமான முறையில் இறந்துகிடந்த புலி!!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள பஞ்ச் புலிகள் சரணாலயத்தில், புலி ஒன்று இறந்த நிலையில் ஆற்றில் மிதந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Samayam Tamil 25 Feb 2018, 4:23 am
மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள பஞ்ச் புலிகள் சரணாலயத்தில், புலி ஒன்று இறந்த நிலையில் ஆற்றில் மிதந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil a tiger with sex uncertain was found floating in the pench river
புலிகள் காப்பகத்தில் மர்மமான முறையில் இறந்துகிடந்த புலி!!


இந்தியாவின் தேசிய விலங்காக இருக்கும் புலிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால், அவற்றைப் பாதுகாக்கும் பல்வேறு நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள பஞ்ச் புலிகள் காப்பகத்திற்கு அருகில் உள்ள பஞ்ச் நதியில் புலியொன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இதையடுத்து, புலிகள் பாதுகாப்பு துறையினர் அங்கு வந்து புலியின் சடலத்தை மீட்டனர்.

முதல் கட்ட ஆய்வில், அந்தப் புலி இறந்து 3 நாட்கள் ஆகியிருக்கும் எனவும் இறந்த புலிக்கு பிப்.25 அன்று உடற்கூறு ஆய்வு நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புலியின் இறப்புக்கான காரணம் பற்றியும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

அடுத்த செய்தி