ஆப்நகரம்

வாட்ஸ் ஆப் அட்மினுக்கு வந்த மிரட்டலால் தற்கொலை!

புதிதாக வாட்ஸ் ஆப் குரூப் உருவாக்கி அதற்கு அட்மினாக இருந்தவருக்கு வந்த மிரட்டலால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

TOI Contributor 15 Mar 2017, 6:51 pm
நாக்பூர் : புதிதாக வாட்ஸ் ஆப் குரூப் உருவாக்கி அதற்கு அட்மினாக இருந்தவருக்கு வந்த மிரட்டலால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
Samayam Tamil a whatsapp admin commits suicide in yavatmal
வாட்ஸ் ஆப் அட்மினுக்கு வந்த மிரட்டலால் தற்கொலை!


மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில், நிகில் கடே என்பவர் சிலநாட்களுக்கு முன் வாட்ஸ் ஆப்பில் ஒரு புதிய குரூப் உருவாக்கியுள்ளார். அதில் அவரின் நண்பர்கள் 4 பேரை உறுப்பினராக சேர்த்துள்ளார்.

இந்த குரூபில் நிகில் சமூக சீர்திருத்தம் குறித்து மிக ஆக்ரோசமாக சண்டை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அட்மின் நிகில் மீது குரூப்பில் உள்ள மற்ற உறுப்பினர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

இந்த மிரட்டலால் பயந்து போன நிகில் தன் வீட்டை விட்டு வெளியேறினார். அவரை தேடிய போலீஸார் ஒரு மரத்தில் தூக்கிட்டு தொங்கி தற்கொலை செய்துள்ளது தெரியவந்தது. இந்நிலையில் இதற்கு காரணமான அவரின் நண்பர்கள் 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்கள் அனைவரும் அந்த குரூப்பில் உறுப்பினராக இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி