ஆப்நகரம்

12 சிங்கங்கள் புடைசூழ நிகழ்ந்த பிரசவம்; பிரமிப்பை ஏற்படுத்திய தாயின் துணிச்சல்...!

12 சிங்கங்கள் புடைசூழ நிகழ்ந்த பிரசவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

TNN 2 Jul 2017, 11:17 am
குஜராத்: 12 சிங்கங்கள் புடைசூழ நிகழ்ந்த பிரசவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
Samayam Tamil a woman gave birth in an ambulance surrounded by lions
12 சிங்கங்கள் புடைசூழ நிகழ்ந்த பிரசவம்; பிரமிப்பை ஏற்படுத்திய தாயின் துணிச்சல்...!


குஜராத் மாநிலம் ஜாஃபராபாத் நகரை அடுத்த லூனாசாபூரைச் சேர்ந்த மங்குபென் என்ற பெண்மணிக்கு, திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அப்போது அதிகாலை 2.30 மணி. உடனடியாக ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த ஆம்புலன்சில் மங்குபென் ஏற்றப்பட்டு, ஜாஃபராபாத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு வண்டி புறப்பட்டது. இதற்கிடையில் அப்பெண்ணிற்கு வலி அதிகம் ஏற்படவே, நடுவழியில் ஆம்புலன்ஸை ஓட்டுநர் ராஜூ ஜாதவ் நிறுத்தினார். இதையடுத்து தொலைபேசி மூலம் மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்கப்பட்டது.

இந்த சூழலில் வனப்பகுதிக்கு நடுவே நிறுத்தப்பட்ட ஆம்புலன்ஸை நோக்கி, 12 சிங்கங்கள் படையெடுத்தன. அவை வாகனத்தை சுற்றி அமர்ந்து கொண்டன. இந்நிலையில் மங்குபென்னிற்கு சுகப்பிரசவத்தில் அழகிய குழந்தை ஒன்று பிறந்துள்ளது. தாயும், சேயும் நலமுடன் இருக்க, ஆம்புலன்ஸ் முகப்பு விளக்கை ஓட்டுநர் ஒளிரச் செய்துள்ளார். அந்த ஒளியைக் கண்டதும் சிங்கங்கள் கர்ஜனையுடன், சற்று நகரத் தொடங்கின. அப்போது கிடைத்த சிறிய இடைவெளியில் மெதுவாக வானகத்தை ஓட்டிச் சென்று, மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கப்பட்டது. சிங்கங்கள் புடைசூழ பிறந்த அந்த குழந்தையை, அவர்களது கிராம மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

In Today's Bizarre News, A Woman Gave Birth In An Ambulance While Surrounded By 12 Lions.

அடுத்த செய்தி