ஆப்நகரம்

பயிர்களை மேய்வதால் பசுக்கள் மீது ஆசிட் வீசும் கொடூரம்..!

பயிர்களை மேயும் பசுக்கள் மீது ஆசிட் வீசும் கொடூர செயலில் அரியான மாநிலத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

TNN 3 May 2017, 8:17 pm
பயிர்களை மேயும் பசுக்கள் மீது ஆசிட் வீசும் கொடூர செயலில் அரியான மாநிலத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
Samayam Tamil acid attack on cows on cows to protect crops in haryana
பயிர்களை மேய்வதால் பசுக்கள் மீது ஆசிட் வீசும் கொடூரம்..!


அரியானா மாநிலத்தில் உள்ள பரிதாபாத் மாவட்டம், வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த மாவட்டத்தின் பெரும்பாலான பகுதியில் விவசாயம் நடைபெறவில்லை. இருப்பினும் இந்த மாவட்டத்தில் உள்ள போபானி என்ற கிராமத்தில், கிடைக்கும் தண்ணீரைக் கொண்டு, மிகவும் சிரமப்பட்டு சில விவசாயிகள் தங்கள் நிலத்தில் பயிர் செய்துள்ளனர்.

இப்படி பயிர் செய்யும் நிலங்களில், அக்கிராமத்தில் உள்ள சில பசுக்கள் மேய்ந்துவிடுவதாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர். இந்நிலையில் சமீபகாலமாக , பயிர்களை மேயும் பசுக்களின் பின்புறத்தில் அந்த கிராம மக்கள் ஆசிட் ஊற்றி வருகின்றனர்.



இதன் காரணமாக சில மாடுகளின் பின்பகுதி வெந்து போயுள்ளது. இது குறித்து தகவலறிந்த விலங்குகள் நல ஆர்வலர்களும், கால்நடை மருத்துவர்களும் அக்கிராமத்தில் முகாமிட்டு, காயமுற்ற பசுக்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த ஆசிட் வீச்சால், சில பசுக்களின் உள்ளுறுப்புகள் கூட பாதிக்கப்பட்டுள்ளதாக விலங்குகள் நல ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து பசுக்களின் உரிமையாளர்கள் காவல்துறையினர் புகார் அளிக்கவில்லை என்பதால் இந்த கொடூர செயலில் ஈடுபட்டவர்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

Acid attack on cows on cows to protect crops in Haryana

அடுத்த செய்தி