ஆப்நகரம்

விவாகரத்தை விவகாரமாக்கிய கணவன்: அதிர்ச்சியில் மனைவி

ரஷியாவைச் சேர்ந்தவர் மார்கரிடா. இவருக்கும் சர்கேவுக்கும் திருமணமாகி 12 வயதில் குறையாடுடைய மகன் இருக்கிறான்.

TNN 27 May 2017, 10:13 am
ரஷியாவைச் சேர்ந்தவர் மார்கரிடா. இவருக்கும் சர்கேவுக்கும் திருமணமாகி 12 வயதில் குறையாடுடைய மகன் இருக்கிறான். இந்நிலையிலொ, மார்கரிடாவுக்கும், சர்கேவுக்கும் இடையில் நீண்டகாலமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதனால் இருவரும் பிரிந்துவிட நினைத்து நீதிமன்றத்தில் விவாகரத்து கோரினர். இந்த வழக்கில், மார்கரிடாவுக்கு ஆதரவாக, கணவரின் வீட்டில் மனைவிக்கும் பங்கு உணடு. அதனால், இருவரும் சரிபாதியாக பிரித்துக்கொள்ளலாம் என்று நீதிமன்றம் ஆலோசனை வழங்கி வழக்கை சுமூகமாக முடித்து வைத்தது.
Samayam Tamil after divorce wife again go to court
விவாகரத்தை விவகாரமாக்கிய கணவன்: அதிர்ச்சியில் மனைவி


விவாகரத்து பெற்ற மகிழ்ச்சியில் மார்கரிடா நிம்மதியாக வீட்டு மாடியில் மகனுடன் தூங்கினார். மறுநாள் காலையில் அறையை விட்டு வெளியே வந்தவர் அப்படியே அதிர்ந்து போனார். ஏனெனில் மாடிப்படி ஆரம்பிக்கும் இடத்தில் மிகப்பெரிய சுவர் கட்டப்பட்டிருந்தது. மாடிப்படி முழுவதும் சுவர் மூலம் அடைக்கப்பட்டிருந்தது. அப்போது சர்கேவின் குரல் கேட்க, என்ன விவகாரம் என்று மார்கரிடா கேட்டிருக்கிறார்.

அதற்கு பதிலளித்த சர்கே நீதிபதியின் கருத்துப்படி வீட்டை சரிபாதியாக பிரித்துவிட்டேன். அதனால் நீ உன்னுடைய வீட்டில் புதிதாக மாடிப்படி கட்டிக்கொள் என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார். இதன் காரணமாக போலீஸ் உதவியுடன் சுவரை இடித்துவிட்டு மார்கரிடா மீண்டும் நீதிமன்றத்தை நாடியிருக்கிறார்.

அடுத்த செய்தி