ஆப்நகரம்

கோவைக்கு 231 வயசாம்: கோவைனாலே கெத்து !

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்றழைக்கப்படும் கோவைக்கு தமிழக வரலாற்றில் என்றைக்குமே தனிச்சிறப்பு உண்டு.

TNN 24 Nov 2017, 5:40 pm
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்றழைக்கப்படும் கோவைக்கு தமிழக வரலாற்றில் என்றைக்குமே தனிச்சிறப்பு உண்டு.
Samayam Tamil age of coimbatore is 231
கோவைக்கு 231 வயசாம்: கோவைனாலே கெத்து !


கோவையை ரசிக்காதவர்களும், கோவை மக்களை நேசிக்காதவர்களும் மிகவும் குறைவு. இயற்கை சூழல் தட்பவெப்பம், சிறுவாணி தண்ணீர், மரியாதை நிறைந்த பேச்சு மற்றவர்களுக்கு உதவும் குணம் என பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டது கோவை நகரம். இந்நகரம் தமிழகத்தின் மூன்றாவது பெரிய நகரமாகும்.


மேற்கில் பாலக்காட்டு கணவாய்க்கும், வடக்கிலுள்ள சகல்கட்டி கணவாய்க்கும் இடையில் அமைந்திருப்பதால் நீண்டகாலம் தொட்டு, இந்நகர் சரித்திர முக்கியத்துவம் பெற்று திகழ்கிறது.
ஆரம்பத்தில் சோழர்களிடமிருந்து பாண்டியர்கள் கைக்கு மாறிய கோவை, பின்னர் 1291வது ஆண்டில், கர்நாடகத்தின் சாளுக்கிய மன்னர்கள் கைக்கு மாறியது. பின் 14வது நூற்றாண்டில் டெல்லியை ஆண்ட முகலாயர்கள் கோவையைக் கைப்பற்றினர்.

மதுரையை ஆண்டு வந்த முகலாய மன்னர்தான் கோவையையும் ஆட்சிபுரிந்தார். 14ம் நூற்றாண்டின் இறுதியில் முகலாய மன்னர்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது. அதன்பின்னர் விஜய நகர சாம்ராஜ்யத்தின் கீழ் கோவை வந்தது. விஜய நகர சாம்ராஜ்யம் வீழ்ந்த பின்னர் மதுரையைத் தலைமையிடமாகக் கொண்ட நாயக்க மன்னர்கள் வசம்கோவை வந்ததாம்.
இப்படி கோவை நகருக்கு பல சிறப்புகள் இருக்கிறது. இதனால் 231 வருஷயம் ஆகியும் கெத்து குறையாத கோவை.

அடுத்த செய்தி