ஆப்நகரம்

தூத்துக்குடியில் பசியாற அட்சயப்பாத்திரம்!!

தூத்துக்குடியில் அட்சயப்பாத்திரம் என்ற பெயரில் ஃபிரிட்ஜ் வைக்கப்பட்டு தேவைப்படுவோர் உணவை எடுத்துச் சென்று பசியாறுவதற்கு, தூத்துக்குடி ஆணையர் அல்பே ஜான் வர்கீஸ் ஏற்பாடு செய்து இருப்பது அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

TOI Contributor 19 Oct 2017, 10:57 am
தூத்துக்குடியில் அட்சயப்பாத்திரம் என்ற பெயரில் ஃபிரிட்ஜ் வைக்கப்பட்டு தேவைப்படுவோர் உணவை எடுத்துச் சென்று பசியாறுவதற்கு, தூத்துக்குடி ஆணையர் அல்பே ஜான் வர்கீஸ் ஏற்பாடு செய்து இருப்பது அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
Samayam Tamil akshaya pathiram in thoothukudi
தூத்துக்குடியில் பசியாற அட்சயப்பாத்திரம்!!


சென்னை, கோவை போன்ற நகரங்களில் ஏற்கனவே இதுபோன்ற திட்டங்கள் செயல்பட்டு வரும் நிலையில், தூத்துக்குடியில் செவ்வாய்கிழமை அந்த மாவட்ட ஆணையர் அல்பே ஜான் வர்கீஸ் அட்சயபாத்திரம் என்ற பெயரில் இந்த திட்டத்தை துவக்கி வைத்தார். துவக்கி வைக்கப்பட்ட சில மணி நேரங்களில் ஃபிரிட்ஜ்ஜில் உணவு குவிய ஆரம்பித்துவிட்டது. அட்சயப்பாத்திரம் என்று பெயரிடப்பட்ட இந்த ஃபிரிட்ஜில் உணவு வைத்து செல்வோர் வைத்து செல்ல, தேவைப்படுவோர் எடுத்து செல்லலாம். என்றும் குறையாமல் வற்றாத பாத்திரமாக இருக்க வேண்டும் என்பதற்காக அட்சயபாத்திரம் என்று பெயரிடப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சியில் வைக்கப்பட்டுள்ள இந்த ஃபிரிட்ஜ்ஜை ஒரு சூப்பர் மார்கெட் நிறுவனம் இலவசமாக வழங்கியுள்ளது. மேலும், பல அமைப்புகள் இதன் பராமரிப்பு செலவை ஏற்றுக் கொளவதாக உறுதி அளித்து இருப்பதாக கூறப்படுகிறது.

தரமான உணவுகள் இந்த பிரிட்ஜ்ஜில் வைத்து செல்கிறார்களா என்பதை கண்காணிக்கவும், இதற்கு கிடைக்கும் வரவேற்பை பொருத்து, நகரின் மற்ற பகுதிகளிலும் இந்த திட்டத்தை துவக்கக் முயற்சி மேற்கொள்ளப்படும் என்று ஆணையர் ஜான் தெரிவித்துள்ளார்.

akshaya pathiram in Thoothukudi

அடுத்த செய்தி