ஆப்நகரம்

அசாத்திய திறமைப் படைத்த ஆம்பூர் குழந்தை நந்தீஷ்வரன்.!

ஆம்பூரைச் சேர்ந்த கார்திகேயன்- ஸ்ரீதேவி தம்பதியரின் குழந்தை நந்தீஷ்வரனின், அசாத்திய திறமைக்கு மக்களிடையே பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

Samayam Tamil 19 Jun 2018, 2:38 pm
ஆம்பூரைச் சேர்ந்த கார்திகேயன்- ஸ்ரீதேவி தம்பதியரின் குழந்தை நந்தீஷ்வரனின், அசாத்திய திறமைக்கு மக்களிடையே பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
Samayam Tamil nand
அசாத்திய திறமைப் படைத்த ஆம்பூர் குழந்தை நந்தீஷ்வரன்.!


ஆம்பூர் சான்றோர்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கார்திகேயன்-ஸ்ரீதேவி. இந்த தம்பதிக்கு 2 வயதில் நந்தீஷ்வரன் என்ற குழந்தை இருக்கிறான். பெரும்பாலான குழந்தைகள் பேசவே தள்ளாடும் இந்த வயதில், நந்தீஷ்வரன், எந்த மாநிலத்தின் தலைநகரை எப்போது கேட்டாலும் சரியாக பதில் சொல்வது மக்கள் அனைவரையும் வியப்படையச் செய்துள்ளது.

இதுமட்டுமல்லாமல் தேசிய சின்னங்கள் அனைத்தையும் கூட நந்தீஷ்வரன் சொல்லி விடுகிறான். குழந்தை நந்தீஷ்வரனின் இந்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

அந்த வீடியோவில் பெரியவர்களே பதில் சொல்ல தடுமாறும் சில கேள்விகளுக்கும் கூட குழந்தை நந்தீஷ்வரன் அசாத்தியமாக பதில் கூறுவது மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இதுகுறித்து குழந்தை நந்தீஷ்வரன் பெற்றோர் கூறுகையில் தன் குழந்தையை சாதனையாளராக்க வேண்டும் என்று சிறு வயது முதலே பழக்கி வந்ததாகவும், அவன் இன்னும் பல உயரங்களை எட்ட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பெற்றொராகிய நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம் என்றும் கூறினர்.

அடுத்த செய்தி