மனைவியுடன் தகாத உறவு; தட்டிக் கேட்ட கணவரை வீட்டுச் சிறையில் அடைத்த போலீஸ்!
சேலம்: பெண்ணுடன் தகாத உறவு தொடர்பாக தட்டிக் கேட்ட கணவரைப் போலீசார் வீட்டுச் சிறையில் வைத்துள்ளனர்.
Samayam Tamil 11 Oct 2018, 12:12 am
சேலம் மாவட்டம் அன்னதானப்பட்டி பகுதியைச் சேர்ந்த மலைவாசன், அவரது மனைவி மணிமேகலை இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதுகுறித்து அவ்வப்போது காவல்நிலையத்தில் மணிமேகலை புகார் அளித்து வந்துள்ளார்.
அப்போது அங்கு உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் கலைசெல்வம் உடன் தவறான பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையறிந்த மலைவாசன் இருவரையும் கண்டித்துள்ளார். அதற்கு கலைசெல்வம் கடுமையாக தாக்கியுள்ளார்.
பின்னர் மலைவாசனை அவரது வீட்டிலேயே சிறை வைத்துள்ளார். இந்நிலையில் ஜன்னல் வழியாக அப்பகுதி மக்களிடையே உதவி கேட்டுள்ளார். பின்னர் அங்கிருந்து வெளியேறி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார்.
இதுகுறித்து காவல் நிலையத்தில் மலைவாசன் புகார் அளித்துள்ளார். ஆனால் வழக்கு ஏதும் பதிவு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் காவல் ஆய்வாளர் கலைசெல்வம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
An illegal relationship with a woman who complained to Police.
அப்போது அங்கு உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் கலைசெல்வம் உடன் தவறான பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையறிந்த மலைவாசன் இருவரையும் கண்டித்துள்ளார். அதற்கு கலைசெல்வம் கடுமையாக தாக்கியுள்ளார்.
பின்னர் மலைவாசனை அவரது வீட்டிலேயே சிறை வைத்துள்ளார். இந்நிலையில் ஜன்னல் வழியாக அப்பகுதி மக்களிடையே உதவி கேட்டுள்ளார். பின்னர் அங்கிருந்து வெளியேறி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார்.
இதுகுறித்து காவல் நிலையத்தில் மலைவாசன் புகார் அளித்துள்ளார். ஆனால் வழக்கு ஏதும் பதிவு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் காவல் ஆய்வாளர் கலைசெல்வம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
An illegal relationship with a woman who complained to Police.