ஆப்நகரம்

பகவான் கிருஷ்ணரின் பிறப்பு சான்றிதழ் கேட்டு ஆர்.டி.ஐ., மனு?

உத்தரபிரதேசத்தில் உள்ள ஆர்.டி.ஐ அதிகாரிகளை ஒரு விண்ணப்பம் அதிரவைத்துள்ளது. அதில் கடவுள் கிருஷ்ணரின் பிறப்பு சான்றிதழ் வேண்டும் என கேட்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 5 Oct 2018, 12:12 pm
சத்தீஸ்கர் மாநிலம், பிலாஸ்பூரில் வசிக்கும் தன்னார்வலர் ஜைனேந்திர குமார், கடந்த மாதம் கிருஷ்ண ஜெயந்தியை விமர்சையாக கொண்டாடினார். பின்னர், அவருக்குள் ஏற்பட்ட சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொள்வதற்காக, பவகான் கிருஷ்ணரின் பிறப்பு சான்றிதழ் கோரி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
Samayam Tamil RTI


இந்த மனுவைக் கண்ட அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தகவல் அதிகாரியும், மாவட்ட கூடுதல் நீதிபதியுமான ரமேஷ் சந்த், பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பிறப்பு என்பது ஒரு அவதாரம், அது ஒரு மதத்தவரின் நம்பிக்கை என தெரிவித்துள்ளார். அவருடைய பிறப்பு சான்றிதழ் கோரி இது போல மனு செய்வது கோலிக்குரிய விஷயம் என்றும் கண்டித்துள்ளார். இது போன்று கேள்விகளுக்கு யாராலும் பதில் சொல்ல முடியாது என தெரிந்துகொண்டு மற்றவரின் நம்பிக்கையை புண்படுத்தும் செயல் இது எனவும் தெரிவித்துள்ளார்.

ஆயினும் அதிகாரி ரமேஷ் சந்த், அந்த மனுவை மதுரா நகரின் பிறப்பு இறப்பு விவரங்களை கவனிக்கும் நகராட்சி ஆணையரிடம் அனுப்பி வைத்துள்ளார். இந்த மனுவுடன் இதற்கான கட்டணமும், ஒரு போஸ்டல் ஆர்டர் இணைக்கப்பட்டிருந்ததால், சட்டப்படி இந்த மனுவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்