ஆப்நகரம்

கல்யாணத்த புதுமையா பண்ணலாம் ஆனால் கல்யாண பத்திாிகைல இவ்லோ புதுமையா?

என்னையா விஷேசம் என்ற தலைப்பில் புதுமையாக வெளிவந்துள்ள திருமண பத்திாிகைகள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.

TOI Contributor 28 Oct 2017, 2:43 am
என்னையா விஷேசம் என்ற தலைப்பில் புதுமையாக வெளிவந்துள்ள திருமண பத்திாிகைகள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.
Samayam Tamil an wedding invitation going viral social media
கல்யாணத்த புதுமையா பண்ணலாம் ஆனால் கல்யாண பத்திாிகைல இவ்லோ புதுமையா?


திருமணத்தில் ஏதாவது ஒரு விஷயத்தை புதுமையாக செய்ய வேண்டும் என்று அனைவரும் விரும்புவது வழக்கம் தான். அதற்காக சிலா் திருமண பத்திாிகைகளில் புதுமையை கையாள்வதும் வழக்கம் தான்.

ஆனால் தற்போது இணையத்தில் வைரலாகிவரும் பத்திாிகையில் கடைபிடிக்கப்பட்டிருக்கும் புதுமையை நீங்கள் எங்குமே பாா்த்திருக்க மாட்டீா்கள். அந்த திருமண பத்திரிகையின் விஷேசத்திற்கு காரணம் அதன் வித்தியாசமான மொழி உரையாடல்தான். "என்னய்யா விஷேசம்" என்ற தலைப்பில்தான் பத்திரிகையின் முதல் வரியே ஆரம்பிக்கிறது. அடுத்ததாக, யாருப்பா மாப்பிள்ளை என்று மணமகன் பெயரும், யாருப்பா பொண்ணு என்று கேட்டு, மணமகள் பெயரும் இடம் பெற்றுள்ளது.



எப்போ, எங்க என்பது போன்ற கேள்விகளும், அதற்கான பதில்களும் உள்ளன. இன்னுமொரு ஹைலைட் என்ன தெரியுமா? என்னப்பா சாப்பாடு? என்று கேட்டு, நடக்குறது, தாவுறது, ஓடுறது போடுறது இதெல்லாம் போடனும்னு எனக்கும் ஆசைதான். ஆனால் துரதிருஷ்டவசமாக வெஜ் மட்டும்தான் என்று இடம் பெற்றுள்ளது.

கிப்ட் ஏதும் வாங்கிட்டு வரணுங்களா, என்று கேட்டு, அன்போட 500 ரூபா கொடுத்தாலும் சரி, பாசத்தோடு 1000 ரூபா கொடுத்தாலும் சரி, வாங்கிக்கோடானு அறிவு சொல்லுது. நீங்க வந்தா மட்டும்போதும்னு மனசு சொல்லது. என் மனசுப்படி நீங்க வந்தா மட்டும் போதும். எல்லாம் சரி சரக்கு உண்டா? இப்படியும் ஒரு கேள்வி உள்ளது. குடி குடியை கெடுக்கும். கல்யாண வீட்டில் பஞ்சாயத்தை உண்டாக்கும். இவ்வாறு அதில் நகைச்சுவையாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



இது ஒருபுறம் இருக்க மற்றொரு பத்திாிகையோ நேரடியாக பீர் பாட்டிலில் தான் அச்சிடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி