ஆப்நகரம்

கோடரியால் கணவனை அடித்துக் கொன்ற மனைவி

வாரங்கல் மாவட்டம் அருகேயுள்ள ஜங்கேடு கிராமத்தில் குடிபோதையில் அட்டகாசம் செய்த கணவரை கோடரியால் மனைவி அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TNN 7 Sep 2016, 3:09 pm
வாரங்கல்: வாரங்கல் மாவட்டம் அருகேயுள்ள ஜங்கேடு கிராமத்தில் குடிபோதையில் அட்டகாசம் செய்த கணவரை கோடரியால் மனைவி அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil angry wife killed her hubby with an axe
கோடரியால் கணவனை அடித்துக் கொன்ற மனைவி


நர்சையா, நிர்மலா தம்பதியினருக்கு 3 பெண் குழந்தைகள். உடல்நலக் குறைவால் நர்சையா கடந்த 2012ஆம் ஆண்டு உயிரிழந்தார். இதனையடுத்து தனது 3 மகள்களையும் சிரமப்பட்டு வளர்த்து, மூத்த மகள் அனுஷாவுக்கு நிர்மலா திருமணம் செய்து வைத்தார்.

வாரங்கல் மாவட்டத்திலேயே பக்கத்து ஊரான வெள்ளம்பள்ளி கிராமத்தில் வசித்த நாகராஜு என்பவருக்கு அனுஷாவை திருமணம் செய்து வைத்தார். திருமணமானதில் இருந்து மாமியார் வீட்டிலேயே இருக்கும் நாகராஜு அவ்வபோது குடித்துவிட்டு மனைவி அனுஷாவை அடித்து சித்திரவதை செய்து வந்துள்ளார்.

இதேபோன்று ஒரு நாள் பயங்கர குடிபோதையில் வீட்டிற்கு வந்த நாகராஜு அனுஷாவின் சகோதரியிடம் தவறாக நடந்துக் கொண்டுள்ளார். அதனைத் தடுக்க முயன்ற மாமியார் நிர்மலாவிடமும் ஆபாசமாக நடந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அனுஷா கோடரியை எடுத்து நாகராஜுவின் தலையில் அடித்ததில், மயக்கமடைந்த நாகராஜூ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதயைடுத்து தாமாகவே போலீஸ் சென்று அனுஷா சரணடைந்துள்ளார். எனினும், நாகராஜூவின் அட்டூழியங்களை போலீசிடம் எடுத்துக் கூறி அனுஷாவை மீட்கும் நடவடிக்கையில் கிராம மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

அடுத்த செய்தி