ஆப்நகரம்

ராணுவ வீரர் அரங்கேற்றிய கள்ளக்காதல் படுகொலை

ஹரியானா மாநிலத்தில் கள்ளக்காதலை கண்டறிந்த மனைவியை கொலை செய்து, காதலியின் வீட்டில் உடலை மறைத்து வைத்த ராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

TNN 26 Feb 2017, 2:14 pm
சண்டிகர்: ஹரியானா மாநிலத்தில் கள்ளக்காதலை கண்டறிந்த மனைவியை கொலை செய்து, காதலியின் வீட்டில் உடலை மறைத்து வைத்த ராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Samayam Tamil army sepoy kills wife with wire puts body in girlfriends trunk
ராணுவ வீரர் அரங்கேற்றிய கள்ளக்காதல் படுகொலை


ஜாட் படைப்பிரிவைச் சேர்ந்த சுகேஷ் குமார்(25), என்பவர் சமீபத்தில் ஜம்மு-காஷ்மீரில் பணியமர்த்தப்பட்டுள்ளார். கடந்த 2ஆண்டுகளுக்கு முன்னதாக பூஜா என்பவரை திருமணம் செய்துக் கொண்ட குமார், ஜஜ்ஜார் அருகேயுள்ள தக்லா கிராமத்தில் வசித்து வந்துள்ளார். இவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது.

ஜஜ்ஜாரில் ஒரு மாத கால விடுப்பில் இருந்த குமாரின் கள்ளக்காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்த அவரது மனைவியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இந்தக் கொலையில் இருந்து தப்பிக்க எண்ணி, காவல்துறையினரை திசைத் திருப்ப, மனைவியை காணவில்லை என காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ராணுவ வீரரது காதலி ஆர்த்தியின் வீட்டில் உள்ள டிரங்க் பெட்டியில் குமார் மனைவியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. குமாரின் புகாரை ஏற்று விசாரணை நடத்த அவரது வீட்டிற்கு காவல்துறையினர் வந்த சோதனையிட்டபோது, பின்புற கதவு வழியாக குமார் தப்பியோடியதையடுத்து, காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அதனடிப்படையில் அவரது கள்ளக்காதலி ஆர்த்தி பற்றி துப்புக் கிடைத்து அவரது வீட்டிலும் சோதனை நடத்தியபோது, ரத்த வெள்ளத்தில் பூஜாவின் உடல் மீட்கப்பட்டதாக ஜஜ்ஜார் இன்ஸ்பெக்டர் சுரேந்தர் சிங் கூறியுள்ளார். இதையடுத்து, ராணுவ வீரர் குமார் மற்றும் அவரது கள்ளக்காதலி ஆர்த்தி ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

An Army sepoy, 25, killed his wife, 23, with a wire and hid her body in a steel trunk at his girlfriend's house in Bhiwani, Haryana, when she found out about his illicit affair.

அடுத்த செய்தி