ஆப்நகரம்

ஆபாச படங்களை நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளைக்கு அனுப்பிய தடகள வீரர் கைது!!

நிச்சயிக்கப்பட்ட பெண் தொடர்பான ஆபாச படங்களை அவருக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளைக்கு அனுப்பிய தடகள வீரர் தீபக் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

TNN 10 Jul 2017, 11:50 am
நிச்சயிக்கப்பட்ட பெண் தொடர்பான ஆபாச படங்களை அவருக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளைக்கு அனுப்பிய தடகள வீரர் தீபக் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
Samayam Tamil athlete sends obscene pictures to engagement bride
ஆபாச படங்களை நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளைக்கு அனுப்பிய தடகள வீரர் கைது!!


சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள டி.பி. சத்திரம் என்ற பகுதியில் தீபக் வசித்து வருகிறார். தடகள வீரரான இவர் தனக்கு பயிற்சி அளித்த தடகள பயிற்சியாளரின் மகளை காதலித்து வந்துள்ளார். கவர்ச்சி வார்த்தைகளால் அந்த இளம் பெண்ணை தனது காதல் வலையில் சிக்க வைத்துள்ளார். அந்தப் பெண்ணும் இவரது காதல் வலையில் சிக்கியது. இதை சாதுர்யமாக பயன்படுத்திக் கொண்ட தீபக் அந்தப் பெண்ணை தனியான ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்று, திரைப்படங்களில் வருவதுபோல் குளிர்பானத்தில் அதிக மயக்க மாத்திரைகளை கலந்து கொடுத்ததாக கூறப்படுகிறது. அதைக் குடித்து சுய நினைவு இழந்த அந்தப் பெண்ணை தீபக் பாலியல் பலாத்காரம் செய்து புகைப்படம் எடுத்ததாக கூறப்படுகிறது.

இதே சமயத்தில்தான் அந்த பெண்ணுக்கு அவரது பெற்றோர் மணமகன் பார்த்து திருமண நிச்சயம் செய்தனர். இந்த திருமணத்தை நிறுத்தாவிட்டால் ஆபாச வீடியோவை இணையதளத்தில் வெளியிடுவேன் என்று தீபக் மிரட்டியுள்ளார். ஆனால் இந்த மிரட்டலுக்கு அந்த பெண் மசியவில்லை . இதனால் ஆத்திரமடைந்த தீபக் நிச்சயித்த மாப்பிள்ளைக்கே வீடியோவை அனுப்பி வைத்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரையடுத்து தீபக் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.


athlete sends obscene pictures to engagement bride

அடுத்த செய்தி