சென்னை: வாகனச் சோதனையின் போது, போலீசாரின் கையை கடித்த ஆட்டோ டிரைவரை கைது செய்தனர்.
சென்னை பெருங்குடி ரயில் நிலையம் அருகே நேற்று இரவு போக்குவரத்து போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஆட்டோ ஒன்று வேகமாக வந்தது. அதை போக்குவரத்து போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
அப்போது ஆவணங்களைக் கேட்ட போது, ஓட்டுநர் தகராறு செய்துள்ளார். இதனால் போலீசார் ஆட்டோ சாவியை எடுத்துக் கொண்டனர். இந்நிலையில் போலீசார் கையை இழுத்து, ஆட்டோ ஓட்டுநர் கடித்துள்ளார்.
அப்போது போலீஸ் அதிகாரி வலியால் துடித்தார். இதற்கிடையில் தப்ப முயன்ற ஆட்டோ ஓட்டுநரை, சக போலீசாரும், பொதுமக்களும் மடக்கிப் பிடித்தனர். பின்னர் வேளச்சேரி போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர்.
இதையடுத்து வேளச்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலு அளித்த புகாரின் பேரில், ஆட்டோ ஓட்டுநரிடம் விசாரித்தனர். அதில் அவர் நீலாங்கரைப் பகுதியைச் சேர்ந்த முருகதாஸ் என்று தெரியவந்துள்ளது.
இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையில் காயமடைந்த சப்-இன்ஸ்பெக்டரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
Auto driver charged over biting police officers hand in Chennai.
சென்னை பெருங்குடி ரயில் நிலையம் அருகே நேற்று இரவு போக்குவரத்து போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஆட்டோ ஒன்று வேகமாக வந்தது. அதை போக்குவரத்து போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
அப்போது ஆவணங்களைக் கேட்ட போது, ஓட்டுநர் தகராறு செய்துள்ளார். இதனால் போலீசார் ஆட்டோ சாவியை எடுத்துக் கொண்டனர். இந்நிலையில் போலீசார் கையை இழுத்து, ஆட்டோ ஓட்டுநர் கடித்துள்ளார்.
அப்போது போலீஸ் அதிகாரி வலியால் துடித்தார். இதற்கிடையில் தப்ப முயன்ற ஆட்டோ ஓட்டுநரை, சக போலீசாரும், பொதுமக்களும் மடக்கிப் பிடித்தனர். பின்னர் வேளச்சேரி போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர்.
இதையடுத்து வேளச்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலு அளித்த புகாரின் பேரில், ஆட்டோ ஓட்டுநரிடம் விசாரித்தனர். அதில் அவர் நீலாங்கரைப் பகுதியைச் சேர்ந்த முருகதாஸ் என்று தெரியவந்துள்ளது.
இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையில் காயமடைந்த சப்-இன்ஸ்பெக்டரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
Auto driver charged over biting police officers hand in Chennai.