ஆப்நகரம்

ஆட்டோ மீது போலீஸ் வாகனம் மோதல் : இருவர் பலி

செய்யாறு அருகே உள்ள சோழவரத்தில் ஆட்டோ மீது போலீஸ் வாகனம் மோதியதில் இரண்டு பேர் பலியானார்கள்.

TNN 17 Jan 2017, 7:31 pm
செய்யாறு அருகே உள்ள சோழவரத்தில் ஆட்டோ மீது போலீஸ் வாகனம் மோதியதில் இரண்டு பேர் பலியானார்கள்.
Samayam Tamil auto police van coliation
ஆட்டோ மீது போலீஸ் வாகனம் மோதல் : இருவர் பலி


செய்யாறு அருகே சோழவரம் என்ற கிராமம் உள்ளது. காஞ்சிபுரத்தில் இருந்து செய்யாறு நோக்கி ஆயுதப்படை வாகனம் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது செய்யாற்றில் ஒரு ஆட்டோ நின்று கொண்டிருந்தது. இந்தநிலையில் ஆய்தப்படை வாகனமானது செய்யற்றில் நின்று கொண்டிருந்த வாகனம் மீது மோதியது.

இந்த விபத்தில் இரண்டு பேர் பலியானார்கள். மேலும் மூன்று பேர் காயமடைந்தனர். ஆயுதப்படை வாகன ஒட்டுநர் மொபைலில் பேசிய படி வாகனத்தை வேகமாக ஓட்டியதால் தான் இந்த விபத்து ஏற்ப்பட்டதாக பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

செய்யாறு அருகே சோழவரம் கிராமத்தில் ஆட்டோ மீது போலீஸ் வாகனம் மோதிய விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். காஞ்சிபுரத்திலிருந்து செய்யாறு நோக்கி சென்ற ஆயுதப்படை வாகனம் ஆட்டோ மீது மோதியதில் இந்த விபத்து நிகழந்துள்ளது. இச்சம்பவத்தில் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். ஆயுதப்படை வாகன ஓட்டுநர் செல்போனில் பேசியபடி வேனை வேகமாக ஓட்டியதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி