ஆப்நகரம்

தன் நோய்க்கு இல்லை தீர்வு: மனமுடைந்த ஆயுர்வேத மருத்துவர் தற்கொலை

தன்னுடைய நோயை தீர்க்க முடியாததால், ஆயுர்வேத மருத்துவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TNN 5 Nov 2016, 12:16 pm
காசியாபாத்: தன்னுடைய நோயை தீர்க்க முடியாததால், ஆயுர்வேத மருத்துவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil ayurveda doctor fails to treat self ends life
தன் நோய்க்கு இல்லை தீர்வு: மனமுடைந்த ஆயுர்வேத மருத்துவர் தற்கொலை


உத்திரப்பிரதேச மாநிலம் ஹபூர்-பில்குவா சாலையில் மருத்துவமனை ஒன்றை நடத்தி வந்தவர் ராம்குமார் சிங் சிசோடியா(65). இவர் நேற்று காலை சாஸ்திரி நகரில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இவரது மனைவி மீரட்டில் இருந்து வீட்டிற்கு திரும்பிய போது, கணவரின் நிலையை கண்டு அதிர்ச்சியடைந்தார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிசோடியா இறப்பதற்கு முன்பு கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். அதில் தனக்கு சுவாசக் கோளாறு இருந்ததாகவும், இதனை குணப்படுத்த முடியாது என அறிந்து கொண்டதாலும் தற்கொலை செய்து கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். பல்வேறு வைத்திய முறைகளை நாடியும், உரிய சிகிச்சை இல்லை என்பதை அறிந்த சிசோடியா, தனது முடிவை தானே தேடிக் கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

A 65-year-old Ayurveda physician who thought he had an incurable disease committed suicide in his house in Ghaziabad's Shastri Nagar.

அடுத்த செய்தி