ஆப்நகரம்

பொதுக்கழிப்பிடத்தில் பிறந்த ஆண் குழந்தை!!

பொதுக்கழிப்பிடத்தில் ஆண் குழந்தையை 27 வயது பெண்மணி பெற்றெடுத்துள்ளார் . இந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TNN 17 Jul 2017, 12:49 pm
பொதுக்கழிப்பிடத்தில் ஆண் குழந்தையை 27 வயது பெண்மணி பெற்றெடுத்துள்ளார் . இந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil baby born in public toilet
பொதுக்கழிப்பிடத்தில் பிறந்த ஆண் குழந்தை!!


கர்நாடக மாநிலத்தில் உள்ள பாகல்கோட் நகரில் இருக்கும் பேருந்து நிலைத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது . பாகல்கோட்டில் உள்ள பேருந்து நிலையத்திற்கு 27 வயது மதிக்கதக்க கர்பிணி பெண் தன் கணவருடன் பேருந்துக்காக காத்துக்கொண்டிருந்தார். அதிக நேரமாகியும் பேருந்து வரவில்லை. அப்போது, இயற்கை உபாதை கழிக்க அந்தப் பெண் கழிவறைக்கு சென்றார். அப்போது எதிர்பாரதவிதமாக அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டது. வலிதாங்க முடியாமல் அந்தப் பெண் கதறினார்.

அப்போது அங்கிருந்த எல்லா பெண்களும் அவரை சமாதானப்படுத்த முயற்சி செய்தனர். பிரசவ வலியாக இருந்ததால் அனைவரும் அந்தப் பெண்னுக்கு பிரசவம் பார்த்தனர். இறுதியில் ஒரு அழகிய ஆண்குழந்தை அந்தப் பெண்ணுக்கு பிறந்தது.

இந்த சம்பவம் நடந்த பின்னர் பாகல்கோட் காவல்துறையினர் குழந்தை மற்றும் தாயை மருத்துவமனையில் சேர்த்தனர் . அவர்களை பரிசோதித்த மருத்துவர், ''குழந்தை குறைமாதத்தில் பிறந்ததால் குழந்தைக்கு அதிக கவனம் செலுத்தப்படுகிறது'' என்றார்.

child born in public toilet

அடுத்த செய்தி