ஆப்நகரம்

குழந்தையையே வைத்து லைக்குகளை எண்ண நினைத்தவர், கம்பி எண்ணும் கொடூரம்

சமூக வலைத்தளங்கள் சமூகத்துக்கு நல்லது செய்யுதோ இல்லையோ, அதில் லைக்குகள் வாங்கும் மோகம் பலருக்கு அதிகரித்துள்ளதால் பிரச்னை தான் எற்பட்டு வருகின்றது. இந்த வகையில் 1000 லைக்குகள் வேண்டும் என்பதற்காக தன் குழந்தையையே மாடியிலிருந்து போட தயாரான தந்தையை போலீஸார் கைது செய்துள்ளனர்.

TNN 21 Jun 2017, 5:44 pm
சமூக வலைத்தளங்கள் சமூகத்துக்கு நல்லது செய்யுதோ இல்லையோ, அதில் லைக்குகள் வாங்கும் மோகம் பலருக்கு அதிகரித்துள்ளதால் பிரச்னை தான் எற்பட்டு வருகின்றது. இந்த வகையில் 1000 லைக்குகள் வேண்டும் என்பதற்காக தன் குழந்தையையே மாடியிலிருந்து போட தயாரான தந்தையை போலீஸார் கைது செய்துள்ளனர்.
Samayam Tamil baby dangled from window of 15th floor apartment by his father
குழந்தையையே வைத்து லைக்குகளை எண்ண நினைத்தவர், கம்பி எண்ணும் கொடூரம்


அல்ஜீரியாவில் 1000 லைக்குகள் வேண்டும் என்ற நோக்கில் 15வது மாடியில் இருந்து ஜன்னலுக்கு வெளியே தனது குழந்தையை பிடித்து கீழே போடுவது போல புகைப்படம் எடுத்து அதை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தோடு, 1000 லைக்குகள் வேண்டும் இல்லையேல், குழந்தையை கீழே போட்டு விடுவேன் என பதிவிட்டிருந்தார்.



இதைப் பார்த்த நெட்டிஷன்கள் லைக்குகளுக்கு பதிலாக தங்களது கண்டனத்தை கமெண்டுகளாக போட்டு தாக்கினர். இதைப்பற்றி தகவல் அறிந்த போலீஸார், அந்த நபர் மீது வழக்கு பதிந்து கைது செய்துள்ளனர்.

அடுத்த செய்தி