ஆப்நகரம்

மூணாரில் அட்டகாசம் செய்த குட்டியானை, பத்திரமாக மீட்பு!!

சுற்றுலாத் தலமான மூணார் நகரில், காட்டிலிருந்து வழி தவறி வந்த குட்டி யானையை வனத்துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.

Samayam Tamil 21 May 2018, 5:30 pm
சுற்றுலாத் தலமான மூணார் நகரில், காட்டிலிருந்து வழி தவறி வந்த குட்டி யானையை வனத்துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.
Samayam Tamil மூணாரில் அட்டகாசம் செய்த குட்டியானை, பத்திரமாக மீட்பு!!
மூணாரில் அட்டகாசம் செய்த குட்டியானை, பத்திரமாக மீட்பு!!


கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத் தலமாக திகழ்வது மூணார். இயற்கை கொஞ்சும் பகுதியாக இருக்கும் இந்த இடம், சுற்றிலும் காடுகளால் சூழப்பட்டுள்ளது. இதனால், அவ்வப்போது காட்டு விலங்குகள் வழிதவறி நகரத்தில் அட்டகாசம் செய்வது வழக்கமான ஒன்றாக உள்ளது.

இந்நிலையில், கூட்டத்திலிருந்து வழிதவறி வந்த 5 மாதங்களே ஆன குட்டியானை ஒன்று மூணார் நகரத்தின் முக்கிய சாலைகளில் சுற்றித் திரிந்துள்ளது. இதன் காரணமாக, அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகன ஓட்டிகள் திக்கு முக்காடியுள்ளனர்.

இதனையடுத்து, குட்டியானை தனியே திரிவதை பார்த்த வாகன ஓட்டிகள், அது பீதியடைமல் இருக்க வாகனங்களை இருந்த இடத்திலேயே நிறுத்தி, வனத்துறையினருக்கு இதுகுறித்து தகவல் கொடுத்துள்ளனர். அதன்பின், அங்கு விரைந்து வந்த வனத்துறையினர், குட்டியானையை மீட்டு பாதுகாப்பு பிரிவில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில், குட்டியானையின் நிலை குறித்து தகவளித்துள்ள வனத்துறையினர், இன்னும் இரண்டு நாட்களில் குட்டியின் வாசத்தை வைத்து தாய் யானை வரும் என எதிர்பார்ப்பதாகவும், அப்படியில்லையெனில் குட்டியை தாயிடம் சேர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி