ஆப்நகரம்

10 ரூபாய் கமிஷனுக்காக ஹோட்டலை அடித்து நொறுக்கிய ஸ்விக்கி பாய்ஸ்!

உணவு டெலிவரி செய்ததற்கு கமிஷன் பணம் 10 ரூபாய் குறைவாக கொடுத்ததால் ஹோட்டலை அடித்து நொறுக்கியுள்ளனர் ஸ்விக்கி பாய்ஸ்.

Samayam Tamil 17 Jan 2019, 11:48 am
பெங்களூரு : உணவு டெலிவரி செய்ததற்கு கமிஷன் பணம் 10 ரூபாய் குறைவாக கொடுத்ததால் ஹோட்டலை அடித்து நொறுக்கியுள்ளனர் ஸ்விக்கி பாய்ஸ்.
Samayam Tamil swiggy hotel


ஸ்மார்போன்களின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், வீட்டிலேயே உணவு ஆர்டர் செய்து பெறும் வாடிக்கை அதிகரித்துள்ளது. இதனால் ஸ்விக்கி, உபர் ஈட்ஸ், ஜொமாட்டோ உள்ளிட்ட பல நிறுவனங்கள் பல ஆஃபர்கள் கொடுத்து உணவு வாங்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

ஹோட்டலை நொறுக்கிய ஊழியர்கள் :
பெங்களூரு, பன்னாரகட்டா சாலையில் இயங்கி வரும் எம்பயர் ரெஸ்டாரண்ட்டில் பணிபுரிந்து வரும் ஃபாரூக் என்பவருக்கும், ஸ்விக்கி டெலிவரி பாய் நதீம் என்பவருக்கும் கமிஷன் கொடுப்பதில் தகராறு ஏற்பட்டது.

வாடிக்கையாளருக்கு உணவு டெலிவரி செய்ய நதீமுக்கு ரூ. 40 கமிஷன் கொடுப்பதாக பாரூக் கூறியிருக்கிறார். ஆனால் வாடிக்கையாளரிடமிருந்து நல்ல பதில் கருத்து வந்தால் தான் ரூ. 40 கொடுக்க முடியும் என ரூ. 10 குறைத்து ரூ.30 கொடுத்துள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு, கை கலப்பானது. இதையடுத்து ஓட்டல் ஊழியர்கள் 7 பேர் சேர்ந்து நதீமை தாக்கியுள்ளனர்.

நதீம், தான் கமிஷன் தொகை கேட்டதற்கு, தன்னை தாக்கி விட்டதாக மற்ற ஸ்விக்கி பாய்ஸ்களிடம் கூற, அங்கு திரண்ட பலர் ஓட்டலை தாக்கினர். இதில் கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து நொறுங்கின. இதனால் ரூ. 12 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்ததாக ஓட்டல் நிர்வாக தெரிவித்துள்ளது.


சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், தாக்குதலில் ஈடுபட்ட ஸ்விக்கி பாய்ஸ் 24 பேரை கைது செய்தனர். இதுகுறித்து பேசிய பெங்களூரு துணை கமிஷனர் போரிலிங்கையா, ஓட்டல் ஊழியர்கள் 7 பேரையும், ஸ்விக்கி ஊழியர்கள் 24 பேரும் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப் பட்டுள்ளனர். இவர்கள் யார் மீதும் கிரிமினல் வழக்கு இல்லை. விசாரணை நடந்து வருகின்றது என தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்