ஆப்நகரம்

சக பெண் ஊழியருக்கு 2 ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்த ஐடி ஊழியர் சிக்கினார்!

பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஐடி ஊழியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 16 May 2018, 4:11 pm
பெங்களூரு: பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஐடி ஊழியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil Bangalore Case
2 ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்த ஐடி ஊழியர் சிக்கினார்


கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிஸ் சிட்டியில் பிரபல ஐடி நிறுவனம் இயங்கி வருகிறது. அங்கு பணிபுரியும் மென் பொறியாளர் விஜய் குமார்(32), சக பெண் ஊழியரிடம் தவறாக நடந்து வந்துள்ளார்.

கடந்த 2016ஆம் ஆண்டு, பெண் ஊழியரிடம் ரூ.7 லட்சம் இ-காமெர்ஸில் முதலீடு செய்யுமாறு வலியுறுத்தியுள்ளார். விஜய் குமாரை நம்பி, அப்பெண்ணும் முதலீடு செய்துள்ளார். இந்நிலையில் தனது முதலீட்டை திருப்பி கேட்ட போது, தவறாக நடக்கத் தொடங்கியுள்ளார்.

அலுவலகம் மற்றும் வீட்டில் தவறுதலாக தொட்டு, பாலியல் தொல்லை அளித்துள்ளார். பொறுத்துப் பொறுத்து பார்த்த அப்பெண், ஒருகட்டத்தில் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக கடந்த 11ஆம் தேதி, இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 354ஏ கீழ் விஜய் குமார் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வழக்கு தொடர்பாக விசாரணைக்கு அழைத்துள்ளதாகவும், அதன்பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Bengaluru techie booked for sexually harassing colleague.

அடுத்த செய்தி