ஆப்நகரம்

கோவையில் காதலர் தினம் கொண்டாட தடைகேட்டு மனு

கோவை மாவட்டத்தில் காதலர் தினத்தை கொண்டாட தடைக் கேட்டு பாரத் சேனா அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

TOI Contributor 7 Feb 2017, 1:59 am
கோவை : கோவை மாவட்டத்தில் காதலர் தினத்தை கொண்டாட தடைக் கேட்டு பாரத் சேனா அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
Samayam Tamil bharat sena demands ban on valentines day celebrations
கோவையில் காதலர் தினம் கொண்டாட தடைகேட்டு மனு


காதலர் தினத்தை கொண்டாட தடை விதிக்க வேண்டும் என மனு கொடுத்த பாரத் சேனா அமைப்பினர், கலெக்டர் அலுவலம் அருகில் காதலர் தின அட்டைகளை கொழுத்தினர். அதோடு வெளிநாட்டு குளிர்பான பாட்டில் களை உடைத்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

காதலர் தினம் கொண்டாடுவது நமது கலாச்சாரம் அல்ல. அது மேற்கத்திய நாடுகளின் கலாச்சாரம். இந்த கொண்டாட்டத்தை இந்தியாவில் கொண்டாடுவதை தடை செய்ய வேண்டும் என கோஷம் முழங்கியதோடு, வெளிநாட்டு அமைப்பான பீட்டாவை தடை செய்ய வேண்டும் என்றும். வெளிநாட்டு குளிர்பானங்களை தடை விதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

பிப்ரவரி 14, 1998ம் ஆண்டு கோவையில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு நினைவிடமமைக்க வேண்டும் என எஸ் பாண்டி தலைமையிலான பாரத் சேனா அமைப்பினர் முழங்கினர்.

அடுத்த செய்தி