பீகார் மாநிலத்தில் பஞ்சாயத்து தலைவர் வீட்டுக் கதவை தட்டாமல் நுழைந்த குற்றத்திற்காக வயதான முதியவரை ஈச்சில் துப்ப வைத்து அதை நாக்கால் எடுக்க வைத்து, செருப்பால் அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் சொந்த மாவட்டமான நாலந்தாவில் உள்ள அஜய்பூர் கிராமத்தின் நூர்சராய் பிளாக்கில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த வயதான முதியவர் ஒருவர் பஞ்சாயத்து தலைவரை சந்திக்க அவரது வீட்டுக்கு சென்றார். கதவு தட்டாமல் வீட்டுக்குள் நுழைந்து விட்டார். இதனால் கோபமடைந்த அந்த வீட்டுப் பெண்கள் இருவர் அந்த முதியவரை செருப்பால் அடிக்கும் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.
மேலும், அந்த முதியவரை தரையில் எச்சில் துப்ப செய்து, அதை அவரது நாக்கால் மீண்டும் எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளனர். இந்த அதிர்ச்சி சம்பவமும் வீடியோவில் பதிவாகி தற்போது வைரலாகி வருகிறது.
Nalanda: Man made to spit & lick as punishment for entering Sarpanch's house without knocking,was also beaten by slippers by women #Bihar pic.twitter.com/WTM31aLMVq — ANI (@ANI) October 19, 2017 இதற்கு மாநில கேபினட் அமைச்சர் நந்த் கிஷோர் யாதவ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், அவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ''இதுபோன்ற சம்பவங்கள் மாநிலத்தில் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காது என்பதற்கு உத்தரவாதம் அளிக்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.
Bihar: Elderly man enters Sarpanch's house, made to spit and lick, beaten up by women
பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் சொந்த மாவட்டமான நாலந்தாவில் உள்ள அஜய்பூர் கிராமத்தின் நூர்சராய் பிளாக்கில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த வயதான முதியவர் ஒருவர் பஞ்சாயத்து தலைவரை சந்திக்க அவரது வீட்டுக்கு சென்றார். கதவு தட்டாமல் வீட்டுக்குள் நுழைந்து விட்டார். இதனால் கோபமடைந்த அந்த வீட்டுப் பெண்கள் இருவர் அந்த முதியவரை செருப்பால் அடிக்கும் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.
மேலும், அந்த முதியவரை தரையில் எச்சில் துப்ப செய்து, அதை அவரது நாக்கால் மீண்டும் எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளனர். இந்த அதிர்ச்சி சம்பவமும் வீடியோவில் பதிவாகி தற்போது வைரலாகி வருகிறது.
Nalanda: Man made to spit & lick as punishment for entering Sarpanch's house without knocking,was also beaten by slippers by women #Bihar pic.twitter.com/WTM31aLMVq — ANI (@ANI) October 19, 2017 இதற்கு மாநில கேபினட் அமைச்சர் நந்த் கிஷோர் யாதவ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், அவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ''இதுபோன்ற சம்பவங்கள் மாநிலத்தில் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காது என்பதற்கு உத்தரவாதம் அளிக்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.
Bihar: Elderly man enters Sarpanch's house, made to spit and lick, beaten up by women