ஆப்நகரம்

3, 000 கி.மீட்டர் நின்று கொண்டே பைக்கில் பயணம் செய்யும் பெண்!

பெண்கள் கோழை இல்லை தைரியமானவர்கள் என்பதை அனைவருக்கும் உணர்த்திட தமிழகம் முழுவதும் பைக்கில் நின்று கொண்டே பயணம் செய்கிறார் சைபி மேத்யூ.

Samayam Tamil 13 Jun 2018, 11:54 am
பெண்கள் கோழை இல்லை தைரியமானவர்கள் என்பதை அனைவருக்கும் உணர்த்திடதமிழகம் முழுவதும் பைக்கில் நின்று கொண்டே பயணம் செய்கிறார் சைபி மேத்யூ.
Samayam Tamil sdkahbfkabs


கேரளாவில் பிறந்தசைபி மேத்யூ-க்கு சின்ன வயதில் இருந்து பைக்என்றால் கொள்ளை பிரியம் . ஆனால் பெண்களுக்கு எதற்கு பைக் என்று அவரின் பெற்றோர் கூறியதால் பைக் ஓட்ட வேண்டும் என்ற அவரது கனவு நிறைவேறவில்லை. இந்த நிலையில் சைபி மேத்யூவை, ஊட்டிக்கு அருகிலுள்ளகடலூரை சேர்ந்த விவசாயிக்கு அவரது பெற்றொர்கள் திருமணம் செய்துவைத்தனர்.

திருமணத்திற்கு பிறகு சைபி மேத்யூ தனது கணவருடன் இணைந்து விவசாயம் செய்தார். அவருக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது. அவரது மகன் பொறியியல் பயின்று வருகிறார். அவனுக்கு சைபி மேத்யூ மற்றும் அவரது கணவர் பைக் வாங்கிக் கொடுத்திருக்கின்றனர்.

இதே வேளையில் சைபி மேத்யூ மனதில் பைக் மேல் கொண்ட காதல் நினைவுக்கு வந்திருக்கிறது. தனது மகனிடம் இந்த விருப்பத்தை தெரிவித்தவுடன், அவரது மகனே சைபிக்கு பைக் ஓட்ட சொல்லி கொடுத்திருக்கிறான்.

அதன்பிறகு குடும்பத்துடன் அவர்கள் அனைவரும் அடிக்கடி பயணம் செய்வார்கள். இந்நிலையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் பெண்கள் தொடர்பான சமூக பிரச்சனைகளுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று சைபி மேத்யூ ஆசைப்பட்டார். எல்லாரும் செய்வதுபோல் நாமும் சாதரணமாக விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யக்கூடாது என்றும், ஏதேனும் வித்தியசமாக செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தார்.

அப்போதுதான் அவர்மகன் கற்றுக்கொடுத்த ‘நின்று கொண்டே பைக் ஓட்டும் முறையை செயல்படுத்தாலாம் என்று நினைதார். முதலில் ஊட்டியிலிருந்து அவிநாசிவரை250 கீலோமீட்டர் நின்றுகொண்டே பயணம் செய்தார். இதற்கு அதிக வரவேற்பு கிடைத்தது.மேலும் சென்ற ஆண்டு லிம்கா சாதனையில் இடம் பிடித்தார்.

தற்போது 3, 000 கிலோமீட்டர் பயணத்தை முன்னெடுத்துள்ளார் சைபி. இந்த பயணத்தை வருகின்ற 13 ஆம் தேதி சென்னையில் நிறைவு செய்கிறார். இதன்மூலம் அவர் ’பெஸ்ட் புக் ஆஃப் ரெக்கார்டு’ சாதனையில் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது.

மேலும் இந்த பயணத்தில் இரவு எந்த ஊர் வந்தாலும் அங்கே பைக்கை நிறுத்திவிட்டு தங்கிவிடுகிறார். மக்களை நாம் நம்ப வேண்டும். அவர்கள் என்னை நம்புகிறார்கள் என்று புன்னைகையுடன் கூறும் சைபிமேத்யூ பெண்களின் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலிக்கிறார்.

அடுத்த செய்தி