ஆப்நகரம்

ஆபாசமாக புகைப்படமெடுத்து சீனியர்கள் ரேகிங் செய்ததால் மாணவி தற்கொலை!

ஆபாசமாக புகைப்படமெடுத்து சீனியர்கள் ரேகிங் செய்ததால் மாணவி தற்கொலை!

TOI Contributor 20 Nov 2016, 6:13 pm
ஆந்திர மாநிலம் கர்னோல் மாவட்டத்தில் உள்ள நன்ட்யால் எனும் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.உஷா ராணி எனும் மாணவி பொறியியல் முதலாமாண்டு படித்து வந்தார். தீபாவளி விடுமுறைக்கு கடப்பா மாவட்டத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்த மாணவி உஷா ராணி தீபாவளி பண்டிகை முடிந்து கல்லூரிக்கு திரும்பியிருக்கிறார். ஆனால் சில மணி நேரங்களில் வீட்டிற்கு திரும்பிய இவர், சீனியர் ரேகிங் செய்கின்றனர் என்று வீட்டில் புகார் தெரிவித்துள்ளார். அதன் பின்பு வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்திருக்கிறார். கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த உஷா ராணி சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
Samayam Tamil blackmailed by seniors student commits suicide
ஆபாசமாக புகைப்படமெடுத்து சீனியர்கள் ரேகிங் செய்ததால் மாணவி தற்கொலை!




உஷா ராணி கல்லூரி வளாகத்தில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். அவருடைய சீனியர்கள் சிலர், உஷா ராணி உடை மாற்றும் போது புகைப்படம் எடுத்து, அதை இணையத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியுள்ளனர். உஷா ராணியை திருமணம் செய்துகொள்வதாக தொல்லை கொடுத்த கல்லூரி லெக்சரர் ஒருவர் குற்றச்செயலில் ஈடுபட்ட சீனியர்களுக்கு ஆதரவு கொடுத்தார் என்று கூறப்படுகிறது.

அடுத்த செய்தி