ஆப்நகரம்

ஆசிரியர்கள் அடித்ததால் மாணவன் தற்கொலை

கோவை: ஒன்பதாம் வகுப்பு மாணவனை மூன்று ஆசிரியர்கள் அடித்து அவமானப்படுத்தியதால் அந்த மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TOI Contributor 16 Aug 2016, 8:56 pm
கோவை: ஒன்பதாம் வகுப்பு மாணவனை மூன்று ஆசிரியர்கள் அடித்து அவமானப்படுத்தியதால் அந்த மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil boy commits suicide after he was beatenby teachers
ஆசிரியர்கள் அடித்ததால் மாணவன் தற்கொலை


கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் நாகராஜன். இவருக்கு பாபு என்ற மகன் இருந்தார். பாபு அருகிலுள்ள அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். பாபுவை அவனது ஆசிரியர்கள் மூன்று பேர் தரக்குறைவாக திட்டி அடித்ததாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அவனது பெற்றொரிடம் அந்த மாணவன் கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து, அவனது பெற்றொர்கள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தனர். இந்த விவகாரம் குறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறிய தலைமை ஆசிரியர் அது குறித்து எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

இதன் பிறகு, அனைத்து மாணவர்கள் முன்பு பாபுவை அவனது ஆசிரியர்கள் அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அந்த மாணவன் நேற்று விஷம் குறித்து தற்கொலை செய்து கொண்டார்.

அவரை காப்பாற்ற அவனது பெற்றோர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினார்கள். தங்களது மகன் தற்கொலைக்கு காரணமாக இருந்த அந்த ஆசிரியர்களை கைது செய்யும் வரை அவரது உடலை தாங்கள் வாங்கமாட்டோம் என அந்த மாணவரின் பெற்றொர்கள் மறுத்துவிட்டனர்.

அடுத்த செய்தி