ஆப்நகரம்

தனியார் கிளினிக்கில் சிகிச்சைப் பெற்ற குழந்தை பரிதாப பலி!!

தனியார் கிளினிக்கில் சிகிச்சைப் பெற்று வந்த 9 மாத குழந்தை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளது

Samayam Tamil 9 Nov 2018, 3:42 am
வேலூர் மாவட்டத்தில், தனியார் கிளினிக்கில் சிகிச்சைப் பெற்று வந்த 9 மாத குழந்தை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil தனியார் கிளினிக்கில் சிகிச்சைப் பெற்ற குழந்தை பரிதாப பலி!!
தனியார் கிளினிக்கில் சிகிச்சைப் பெற்ற குழந்தை பரிதாப பலி!!


வேலூர் மாவட்டம் கோட்டவூர் பகுதியைச் சேர்ந்தவர் சக்தி(27), இவரது மனைவி இளவரசி (23). இவர்களின் 9 மாத குழந்தையான பிரித்விராஜ்க்கு, கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, அந்த தம்பதியினர் ஆயுர்வேத கிளினிக் ஒன்றில் குழந்தைக்கு மருத்துவ சிகிச்சை கொடுத்துள்ளனர். இந்நிலையில், வியாழக்கிழமை காலை, குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக திருப்பத்தூர் சுகாதாரத்துறை இணை இயக்குநர் விசாரணை மேற்கொண்டுள்ளார். மேலும், அந்த ஆயுர்வேத கிளினிக் எது என்பதையும் ஆய்வு செய்து வருகிறார்.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்