கொல்கத்தா: கொல்கத்தாவில் பள்ளி மாணவன், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் 'குட் பாய்' என்று பதிவிட்ட பின் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பதினோராம் வகுப்புப் படித்து வரும் சம்ப்ரித் பானர்ஜி, கடந்த புதன்கிழமையன்று இரவு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் 'குட் பாய்' என்று பதிவிட்டு, வீட்டில் உள்ள ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். மறுநாள் சம்ப்ரித்தை எழுப்ப வந்தபோது, அவர் தற்கொலை செய்துக் கொண்டது தெரியவந்தது. சம்ப்ரித்தின் தற்கொலை குறித்து எந்த கடிதமும் காணப்படவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
நடந்து முடிந்த அரையாண்டுத் தேர்வில் குறைவாக மதிப்பெண் பெற்றதால் கவலையில் இருந்த சம்ப்ரித் மனமுடைந்து தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். சம்ப்ரித்தின் பெற்றோர்கள் அவரது படிப்பை கருத்தில் கொண்டு எப்போதும் கண்டிப்புடன் நடந்துக் கொண்டதை ஒப்புக் கொண்டுள்ளனர். இந்நிலையில், சம்ப்ரித்தின் பள்ளி ஆசிரியையும் அடிக்கடி அனைத்து மாணவர்கள் முன்பும் சம்ப்ரித்தை அவமானப்படுத்தும் விதமாக நடத்தியதில் அவர் கடுமையான மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் சம்ப்ரித்தை வணிக ஆசிரியர் கொடுமைப்படுத்தி வந்ததாக ஆசிரியர் மீது அவரது தாயார் அபர்ணா குற்றம்சாட்டியுள்ளார். இருபாலர் பள்ளியில் படிக்கும் தனது மகனின் காதை பிடித்து திருகி தரக்குறைவாக ஆசிரியர் பேசியதையடுத்து, காமர்ஸ் வகுப்புக்கு கடந்த இரண்டு நாட்களாக சம்ப்ரித் செல்லவில்லை என்றும் அவர் தாய் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு, 'தான் எழுதிய அதே பதிலை எழுதிய மற்றவர்களுக்கு மதிப்பெண் வழங்கியபோது, தனக்கு மட்டும் ஏன் குறைவான மதிப்பெண்கள் போட்டிருக்கிறீர்கள்' என்று ஆசிரியரிடம் சம்ப்ரித் கேள்வி எழுப்பியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த ஆசிரியர் சம்ப்ரித்தை அரைந்து, வகுப்பைவிட்டு வெளியேறுமாறு கூறினார். இதனால் கடந்த சில நாட்களாகவே சம்ப்ரித் கவலையுடன் காணப்பட்டதாக பள்ளி மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பள்ளிக்கு ஒருநாள் விடுமுறை அளிக்க வேண்டும் என்று மாணவர்கள் வலியுறுத்தினர். இதற்கு பள்ளி நிர்வாகமும் பதில் தர மறுத்துவிட்டது.
When Class-XI student Samprit Banerjee posted a goodbye message on Facebook on Wednesday night, friends who noticed it did not guess for a moment he was bidding adieu to life. Few hours later on Thursday morning, the teenager was found hanging from the ceiling fan in his bedroom at his Paschim Putiary home. Though no suicide note was found, the boy is suspected to have taken his own life as he was upset over being rebuked for his poor performance in his half-yearly examination.
பதினோராம் வகுப்புப் படித்து வரும் சம்ப்ரித் பானர்ஜி, கடந்த புதன்கிழமையன்று இரவு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் 'குட் பாய்' என்று பதிவிட்டு, வீட்டில் உள்ள ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். மறுநாள் சம்ப்ரித்தை எழுப்ப வந்தபோது, அவர் தற்கொலை செய்துக் கொண்டது தெரியவந்தது. சம்ப்ரித்தின் தற்கொலை குறித்து எந்த கடிதமும் காணப்படவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
நடந்து முடிந்த அரையாண்டுத் தேர்வில் குறைவாக மதிப்பெண் பெற்றதால் கவலையில் இருந்த சம்ப்ரித் மனமுடைந்து தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். சம்ப்ரித்தின் பெற்றோர்கள் அவரது படிப்பை கருத்தில் கொண்டு எப்போதும் கண்டிப்புடன் நடந்துக் கொண்டதை ஒப்புக் கொண்டுள்ளனர். இந்நிலையில், சம்ப்ரித்தின் பள்ளி ஆசிரியையும் அடிக்கடி அனைத்து மாணவர்கள் முன்பும் சம்ப்ரித்தை அவமானப்படுத்தும் விதமாக நடத்தியதில் அவர் கடுமையான மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் சம்ப்ரித்தை வணிக ஆசிரியர் கொடுமைப்படுத்தி வந்ததாக ஆசிரியர் மீது அவரது தாயார் அபர்ணா குற்றம்சாட்டியுள்ளார். இருபாலர் பள்ளியில் படிக்கும் தனது மகனின் காதை பிடித்து திருகி தரக்குறைவாக ஆசிரியர் பேசியதையடுத்து, காமர்ஸ் வகுப்புக்கு கடந்த இரண்டு நாட்களாக சம்ப்ரித் செல்லவில்லை என்றும் அவர் தாய் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு, 'தான் எழுதிய அதே பதிலை எழுதிய மற்றவர்களுக்கு மதிப்பெண் வழங்கியபோது, தனக்கு மட்டும் ஏன் குறைவான மதிப்பெண்கள் போட்டிருக்கிறீர்கள்' என்று ஆசிரியரிடம் சம்ப்ரித் கேள்வி எழுப்பியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த ஆசிரியர் சம்ப்ரித்தை அரைந்து, வகுப்பைவிட்டு வெளியேறுமாறு கூறினார். இதனால் கடந்த சில நாட்களாகவே சம்ப்ரித் கவலையுடன் காணப்பட்டதாக பள்ளி மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பள்ளிக்கு ஒருநாள் விடுமுறை அளிக்க வேண்டும் என்று மாணவர்கள் வலியுறுத்தினர். இதற்கு பள்ளி நிர்வாகமும் பதில் தர மறுத்துவிட்டது.
When Class-XI student Samprit Banerjee posted a goodbye message on Facebook on Wednesday night, friends who noticed it did not guess for a moment he was bidding adieu to life. Few hours later on Thursday morning, the teenager was found hanging from the ceiling fan in his bedroom at his Paschim Putiary home. Though no suicide note was found, the boy is suspected to have taken his own life as he was upset over being rebuked for his poor performance in his half-yearly examination.