ஆப்நகரம்

கார்ட்டுன் பார்த்து தீ வைத்துக் கொண்ட சிறுவன் பலி!!

ஹைதராபாத்: டிவியில் கார்ட்டூன் பார்த்து முடித்த சிறுவன் தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டு இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TOI Contributor 3 Jun 2017, 5:40 pm
ஹைதராபாத்: டிவியில் கார்ட்டூன் பார்த்து முடித்த சிறுவன் தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டு இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil boy sets himself afire after watching cartoon film dies
கார்ட்டுன் பார்த்து தீ வைத்துக் கொண்ட சிறுவன் பலி!!


இத்குறித்து ஹைதராபாத் புறநகரில் உள்ள பாலாபூர் போலீஸ் நிலைய எஸ்.பி., விஷ்ணுவர்த்தன் ரெட்டி கூறுகையில், ''கடந்த ஜூன் 1ஆம் தேதி தொலைபேசி அழைப்பு வந்தது. தாத்தா, பாட்டி வீட்டில் தங்கியிருந்த ஜெயதீப் மடுகுலா என்ற 12 வயது சிறுவன் டிவியில் கார்ட்டுன் சினிமா பார்த்துக் கொண்டு இருந்துள்ளான். சிறிது நேரத்தில் வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று உடம்புக்கு தீவைத்துக் கொண்டுள்ளான். அலறல் சத்தம் கேட்டு ஓடிச் சென்று பார்த்தபோது உடம்பு முழுவதும் தீபற்றி எரிந்து கொண்டுள்ளது.

இதையடுத்து உடனடியாக சிறுவன் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் உஸ்மானியா பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை இறந்தார். இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்'' என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சிறுவனின் தாத்தா கூறுகையில், ''கார்ட்டூன் சினிமாவில் வருவதைப் போன்று தானும் எரிந்து கொண்டு இருக்கிறேன் என்று கத்திக் கூறினான். ஆனால், கார்ட்டூன் கேரக்டர் பார்த்து அவ்வாறு செய்தானா என்பதை எங்களால் உறுதியாக கூற முடியவில்லை. அதேசமயம், வேறு காரணம் என்று தற்போது எங்களால் கூறவும் முடியவில்லை'' என்று தெரிவித்துள்ளார்.

Boy sets himself afire after watching cartoon film, dies

அடுத்த செய்தி