ஆப்நகரம்

வியக்க வைக்கும் போலியோ மணல் சிற்பம்

உலக போலியோ தினத்தை முன்னிட்டு இன்று பிரபல மணல்சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் மணல் சிற்பம் ஒன்றை வடிவமைத்துள்ளார்.

Times Now 24 Oct 2017, 3:06 pm
உலக போலியோ தினத்தை முன்னிட்டு இன்று பிரபல மணல்சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் மணல் சிற்பம் ஒன்றை வடிவமைத்துள்ளார்.
Samayam Tamil breathtaking sand art by sudarsan pattnaik on world polio day see pic
வியக்க வைக்கும் போலியோ மணல் சிற்பம்


போலியோ எனப்படும் இளம்பிள்ளை வாத நோய்க்கு தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்த ஜோனஸ் சால்க் என்ற மருத்துவரின் நினைவாக உலக போலியோ தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 24-ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அவரது கண்டுபிடிப்பினால் உலக அளவில் போலியோ 99% கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த ஆண்டு உலக போலியோ தினத்தை முன்னிட்டு இன்று பிரபல மணல்சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் பூரி கடற்கரையில் மணல் சிற்பம் ஒன்றை வடிவமைத்துள்ளார். அதனைப் பார்க்க ஏராளமானவர்கள் அங்கு குவிகின்றனர்.
Today is #WorldPolioDay; the whole World should unite to #EndPolioNow. Sharing One of my SandArt #ByeByePolio . pic.twitter.com/agfYmLK2Pi — Sudarsan Pattnaik (@sudarsansand) October 24, 2017 தனது மணல் சிற்பத்தில் தாயுடன் ஒரு குழந்தை இருப்பது போன்ற தோற்றத்தையும் அத்துடன் பைபை போலியோ என்ற வாசகத்தையும் செதுக்கியுள்ளார்.

உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விவரப்படி ஏற்படும் 200 பேரில் ஒருவருக்கு போலியோ குணப்படுத்த முடியாத வாதத்தை ஏற்படுத்துகிறது. 5-10 சதவீதம் பேருக்கு மூச்சு தசைகள் இயக்கம் இழப்பதால் மரணம் அடைகின்றனர்.

அடுத்த செய்தி