ஆப்நகரம்

மணமகன் புகையிலை சுவைத்துக் கொண்டிருந்ததால் திருமணத்தை நிறுத்திய பெண்!

திருமண மணமேடை வரை மிக உற்சாகமாக இருந்த மணக்கள், மணமேடையை அடைந்த போது, மணமகன் குட்கா (புகையிலை) மென்று கொண்டிருந்ததால் திருமணத்தை நிறுத்தியதால், இரு வீட்டாரிடையே பெரிய பிரச்னை ஏற்பட்டது.

TNN 14 Jun 2017, 9:15 am
திருமண மணமேடை வரை மிக உற்சாகமாக இருந்த மணக்கள், மணமேடையை அடைந்த போது, மணமகன் குட்கா (புகையிலை) மென்று கொண்டிருந்ததால் திருமணத்தை நிறுத்தியதால், இரு வீட்டாரிடையே பெரிய பிரச்னை ஏற்பட்டது.
Samayam Tamil bride in up sees groom chewing gutkha during rituals refuses to marry him
மணமகன் புகையிலை சுவைத்துக் கொண்டிருந்ததால் திருமணத்தை நிறுத்திய பெண்!


உத்தர பிரதேசம், பல்லிலா மாவட்டத்தில் உள்ளது மாரர்பட்டி கிராமம். இங்குள்ள பெண்ணுக்கு அருகில் உள்ள லெல்கானி கிராமத்தில் உள்ள ஆணுக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

அதன் படி கடந்த ஞாயிறு அன்று திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திருமணத்திற்காக மணமேடை வரும் வரை மிக உற்சாகமாக மணமக்கள் இருந்தனர். ஆனால் மணமேடையில் திருமண சடங்கு நடந்து கொண்டிருந்த போது, மணமகன் குட்கா சுவைத்துக் கொண்டிருந்ததால், கடுப்பான மணமகள் திருமணத்தை நிறுத்தினார்.

பெண்ணின் முடிவை இரு வீட்டாருக்கும் பிடிக்காவில்லை என்பதால், அன்று முழுவதும் பெண்ணிடமும்,மணமகன் வீட்டாரிடமும் பேச்சு வார்த்தை நடத்தினர். இருப்பினும் பெண்ணின் முடிவை மாற்றிக்கொள்வதாக இல்லை. இதையடுத்து மணமகன் வீட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அடுத்த செய்தி