ஆப்நகரம்

உடலுறவுக்கு மறுத்த புதுமணப்பெண்ணின் கழுத்து எலும்பை உடைத்த கொடூர கணவர்!!

கராச்சி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக இருக்கும் பெண் ஒருவர், மாதவிடாயினால் முதலிரவில் உடலுறவுக்கு சம்மதிக்கவில்லை என்ற காரணத்திற்காக அவரை கழுத்து எலும்பை அவரது கணவர் உடைத்த சம்பவம் அதிர்ச்சியை அளித்துள்ளது.

TOI Contributor 2 Mar 2017, 2:36 pm
கராச்சி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக இருக்கும் பெண் ஒருவர், மாதவிடாயினால் முதலிரவில் உடலுறவுக்கு சம்மதிக்கவில்லை என்ற காரணத்திற்காக அவரை கழுத்து எலும்பை அவரது கணவர் உடைத்த சம்பவம் அதிர்ச்சியை அளித்துள்ளது.
Samayam Tamil bride on period said no to her husband for sex he broke her collarbone
உடலுறவுக்கு மறுத்த புதுமணப்பெண்ணின் கழுத்து எலும்பை உடைத்த கொடூர கணவர்!!


இந்தப் பதிவை அந்தப் பெண்ணோ, அவரது குடும்பத்தினரோ பதிவிடவில்லை. அவருடன் படித்து வரும் மருத்துவ மாணவர் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவில் அவர் தெரிவித்து இருப்பதாவது:

என்னுடன் படித்து வரும் மருத்துவ பயிற்சி மாணவி அப்பாசி ஷஹீத் மருத்துவமனைக்கு பயிற்ச்சிக்காக வந்து இருந்தார். முகம் முழுவதும் காயங்களாக இருந்தது. எனக்கு அதிர்ச்சி. ஏன், உன் முகம், கைகளில் இவ்வளவு காயங்கள் இருக்கின்றன என்று கேட்டேன். அப்போது அந்த மாணவி கூறியவை எனக்கு அதிர்ச்சி அளித்தது. திருமணமான அன்றே தான் மாதவிடாய் ஆகிவிட்டதாகவும், ஆனால், தனது கணவர் அவருடன் உடலுறவு வைத்துக் கொள்ள விரும்பியதாகவும், இதற்கு மறுப்பு தெரிவித்ததால், அடித்து துன்புறுத்தி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் தெரிவித்தார்.

மேலும், காலால் உதைத்து சித்ரவதை செய்துள்ளார். அடிக்க வேண்டாம் என்று கெஞ்சியபோதும், அடித்து கழுத்தை நெரித்துள்ளார். இதில் அவரது கழுத்து எலும்பு உடைந்துள்ளது'' என்று பதிவிட்டுள்ளார்.

மாதவிடாய் அடைந்திருக்கும் பெண்ணுடன் உடலுறவு கொள்ளக் கூடாது என்று இஸ்லாம் போதிக்கிறது. அப்படி இருந்தும் கூட எனது சகோதரியை அடித்து துன்புறுத்தி இருக்கிறார் அவரது கணவர் என்று பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் கருத்து தெரிவித்துள்ளார்.

Bride On Period Said No To Her Husband For Sex, He Broke Her Collarbone

அடுத்த செய்தி