ஆப்நகரம்

மனைவியின் நிஜ அழகை மறைத்து திருமணம்; உண்மையறிந்து புதுமாப்பிள்ளை தற்கொலை!

மனைவியின் உண்மையான அழகு தெரியவந்ததால் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டார்.

Samayam Tamil 6 Sep 2018, 8:13 pm
விசாகப்பட்டினம்: மனைவியின் உண்மையான அழகு தெரியவந்ததால் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டார்.
Samayam Tamil Suicide


ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அரசு அலுவலகம் ஒன்றில் பணியாற்றி வந்தவர் ஷேக் மைதீன். இவருக்கும் முபீனா என்பவருக்கும், கடந்த 2ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. அன்று மாலை மாப்பிள்ளை மிகவும் வருத்தமுடன் காணப்பட்டார்.

இதுகுறித்து விளக்கம் கேட்ட மாப்பிள்ளையின் தாயார், திருமணத்திற்கு முன் புதுப்பெண் உண்மையான புகைப்படத்தை அளிக்கவில்லை என்று அறிந்து கொண்டார். தற்போது நேரில் பார்த்த போது, தனது மனைவி அழகாக இல்லை என்று வருத்தப்பட்டார்.

இதையடுத்து தாயார் சமாதானம் செய்தார். உடனே மருமகளுக்கு தோல் மருத்துவர் ஒருவரிடம் சிகிச்சைக்கு பரிந்துரை செய்துள்ளார். ஆனால் ஷேக் மைதீன் மன நிறைவு பெறவில்லை. இந்நிலையில் கடந்த 4ஆம் தேதி இரவு, நண்பரின் வீட்டுக்குச் சென்று, அங்கேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சூழலில் புதுமாப்பிள்ளை நீண்ட நேரம் ஆகியும் காணாததால், மொபைலில் அழைத்துள்ளனர். அப்போது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து தமது குடும்பத்தை ஏமாற்றி விட்டதாக, மணமகள் குடும்பத்தார் மீது மணமகன் வீட்டார் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

Bridegroom suicide for bride not beauty in Andhra Pradesh.

அடுத்த செய்தி