ஆப்நகரம்

சக மாணவர்கள் கிண்டல் செய்ததால், 13 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை

சக மாணவர்கள் கிண்டல் செய்ததால், 13 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TNN 2 Feb 2017, 3:12 pm
பெங்களூரு: சக மாணவர்கள் கிண்டல் செய்ததால், 13 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil bullied in class 13 year old boy commits suicide
சக மாணவர்கள் கிண்டல் செய்ததால், 13 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை


கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நீலமங்களா பகுதியைச் சேர்ந்தவர் ராஜா சிங். அவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். அவரது மனைவி வேதா பாய், தனியார் உணவு உற்பத்தி தொழிற்சாலையில் வேலை செய்கிறார். அவர்களது மகன் விகாஸ் ராஜா சிங்(13) தனியார் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் விகாசை, அவரது நண்பர்கள் கிண்டல் செய்துள்ளனர். அதனால் மனமுடைந்த அச்சிறுவன், வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மதநாயகனஹல்லி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் இறந்த சிறுவனின் கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அதில் சக மாணவர்களின் கிண்டலால் தற்கொலை செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.

A Class VII student allegedly committed suicide as he was allegedly bullied by his classmates in Bengaluru.

அடுத்த செய்தி